Share this book with your friends

IRANDAVATHU THALI / இரண்டாவது தாலி

Author Name: RajeshKumar | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

சுபமதி, செல்லமாக வளரும் பணக்கார வீட்டுப் பெண். அப்பா தொழிலதிபர்.அம்மா இல்லாததால் சுதந்திரம் கொடுத்து  பாசமாக வளர்க்கும் அப்பா. பல விஷயங்களில் கண்டிப்பானவர். அதனால் அவளுக்கு அப்பாவிடம்  பயம் கலந்த மரியாதை. 

ஒரு சமயத்தில் தன்  உயிரை காப்பற்றியதால் சுபமதி ,புவனேந்திரன் எனும் இளைஞனிடம் மனதை பறிக் கொடுக்கிறாள். இதற்கிடையில் அவளின்  அப்பா தன்னுடனே இருக்கும்  அக்கா பையன் சுந்தரத்தை சுபமதிக்கு திருமணம் செய்ய ஆயுத்தம் செய்கிறார். 

காதலன் வீட்டை விட்டு வெளியே வர சொல்கிறான்.அவ்வளவு  இலகுவாக அப்பாவிற்கும் சுந்தரத்துக்கும்  துரோகம்செய்ய  அவளுக்கு மனம் வரவில்லை.

குழப்பத்தில் ஆழ்கிறாள் சுபமதி.ஆனால் அவள் ஒரு முடிவு எடுக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறாள். அந்த முடிவு அவள் வாழ்க்கையை மட்டுமல்ல அவள்  சார்ந்தவர்களின் வாழ்க்கையையும்  புரட்டிப் போடுகிறது.

கதையில் வரும் வசனங்களும் நிகழ்வுகளும் உங்கள் மனதை வருடவும் செய்யும், நெகிழவும்  செய்யும்.

பிறகு, கதைக்கும் தலைப்பிற்கும்  என்ன தொடர்பு என்று கேட்கிறீர்களா?  அறிய படியுங்கள்,ராஜேஷ்குமாரின் விறுவிறுப்பான நடையில்  இரண்டாவது தாலி.

Read More...
Paperback
Paperback 220

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

ராஜேஷ்குமார்

ஆர்.கே. என்னும் இந்த இரண்டு எழுத்துக்களுக்குள் அடங்கியிருக்கும் ராஜேஷ்குமார் என்னும் எழுத்தாளர் 1969ம் ஆண்டு தன்னுடைய 21 வயதில் எழுத ஆரம்பித்து 2019ல் தன்னுடைய எழுத்துலக வாசத்தின் 50வது ஆண்டாய் முடித்துக் கொண்டு இன்னமும் எழுதிக்கொண்டு இருப்பவர்.

1947-ம் ஆண்டு மார்ச் 20ம் தேதி பிறந்த இவர்க்கு பெற்றோர் இட்ட பெயர் ராஜகோபால். தாத்தாவின் பெயரான குப்புசாமியையும், அப்பாவின் பெயரான ரங்கசாமியையும் தன்னுடைய பெயரோடு இணைத்துக்கொண்டதின் காரணமாய் பள்ளி மற்றும் கல்லூரிகளில் சக மாணவர்களால் கே.ஆர்  என்று அழைக்கப்பட்டவர்.

பி.எஸ்ஸியில் தாவரவியலையும் பி.எட்டில் நேச்சுரல் சயின்ஸையும் முடித்து ஐந்தாண்டு காலம் ஆசிரியராய் பணி புரிந்த பிறகு அந்தப் பணியை ராஜினாமா செய்துவிட்டு அப்பாவுடன் இணைந்து கைத்தறிச்சேலை வியாபாரத்தில் தன்னை இணைத்துக் கொண்டவர்.  அதை கவனித்தபடியே கதைகள் எழுதியவர். 1973 முதல் 1980 வரை தன்னுடைய வியாபார விஷயமாக மாதம் ஒரு முறை இந்தியாவின் வடமாநில நகர்களுக்கு சென்று வந்ததின் விளைவாகவும் பலதரப்பட்ட மக்களையும், நிகழ்வுகளையும் சந்தித்ததின் பயனாகவும் பல கதைகள் அவர் மனதிலே உருவாகி சிறுகதைகளாகவும், நாவல்களாகவும் பல்வேறு நாளிதழ்களிலும் வார இதழ்களிலும் வெளிவந்தது.

Read More...

Achievements

+7 more
View All