Share this book with your friends

Kaagithamazhai / காகிதமழை

Author Name: S. Ashwin Parameshwar | Format: Paperback | Genre : Poetry | Other Details

ஒரு குழந்தையின் புன்னகை போல, அழுகையைப்போல ஒரு படைப்பாளியின் மனது திறந்து கொள்ளும் அசலான தருணம் எதுவென்று அத்தனை எளிதில் இனம் கண்டுவிட இயலாது. அஷ்வின் பரமேஷ்வரின் காகித மழைக்குள் நனைந்து திரும்பி இன்னும் கொஞ்சம் பெய்யாதா என குழந்தை கரம் நீட்டி வானம் பார்க்கிறேன்.... பாரதியின் படைப்புக்குள் ஆவேசமான மழையை பார்க்கலாம். தீம் தறிகிட என அது கொட்டுப்பறை திக்கெட்டு முழங்கும். அஷ்வின் பரமேஷ்வரின் கவிதை வெளியெங்கும் ஒரு சாரல் மழை சதா பெய்தபடியிருப்பதை  குறிப்பிட்டு சொல்ல வேண்டும். ஒவ்வொரு படைப்பாளியினுள்ளும் ஒன்று கூட வரும். நனைந்த பின்னதாக சொட்டும் துளியென. ஆனந்தின் கவி வானத்து சிட்டுக் குருவி போல. நகுலனின் அறைச் சுவற்று இருண்மை போல. ஆத்மநாமின் வெண் சுருட்டுப் புகைக்குள் வளையமிடும் மென்மையான பதட்டத்தைப் போல. ஆர்.கே. லெக்சுமணனின் கேலி சித்திரத்தில் வரும் அந்த குடை போல. காகிதமழை என்னளவில் நல்ல அடையாளங்களுடன் கூடிய ஒரு படைப்பை, படைப்பாளியை. அச்சு அசலான ஒரு மழைக்கால  பின்மாலைப் பொழுதை  அதன் அத்தனை பாவங்களுடன், கவிச்சியுடன் தந்து கொண்டுள்ளதாகவே  கருதுகிறேன்.

  இரா. மோகன்ராஜன் 

  எழுத்தாளர்

Read More...
Paperback
Paperback 190

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

சி. அஷ்வின் பரமேஷ்வர்

சி.அஷ்வின் பரமேஷ்வர் சென்னை லொயோலா கல்லூரியில் ஆங்கிலத்துறை உதவி பேராசிரியராக பணியாற்றிவருகிறார். பள்ளி ,கல்லூரி மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் பேச்சாளராகவும் உள்ளார் .கதை ,கவிதைகளின்பால் தீராத ஆர்வம் உள்ள இவர் காகிதமழை என்ற கவிதைத்தொகுப்பை 2015இல் வெளியிட்டுள்ளார். அறைக்குள் வந்த பட்டாம்பூச்சி என்ற கவிதைநூலை 2022இல் வெளியிட்டுள்ளார். தற்போது வெளியிட்டுள்ள இந்த நூல் காகிதமழை கவிதை தொகுப்பின் இரண்டாவது பதிப்பு. முதல் பதிப்பில் இருக்கும் கவிதைகளுடன் சேர்த்து இன்னும் பதினான்கு கவிதைகளை இணைத்து இந்த நூலை வெளியிட்டுள்ளார்.

Read More...

Achievements

+2 more
View All