Share this book with your friends

Kannathil Muthamital / கன்னத்தில் முத்தமிட்டால்

Author Name: Indumathi | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

தன் அம்மாவின் விருப்பமில்லாமல் லண்டன் செல்லும் சத்யா என்கிற சத்யமூர்த்தி அங்கே கரோலினிடம் தனது காதலை வெளிப்படுத்துகிறான். தான் ஏற்கெனவே ஒருவனால் ஏமாற்றப்பட்ட சம்பவத்தை கரோலின்  சொல்ல அதிர்ந்துபோகிறான். அதே நேரத்தில், இந்தியாவில் உள்ள சத்யாவின் தங்கை யாமினியைக் காதல் வலையில் விழ வைத்து ரவி ஏமாற்றிவிடுகிறான். இதனால் யாமினியின் எதிர்காலம் சிக்கலுக்குள்ளாகிறது. இந்த இரண்டு சம்பவங்களுக்கும் தீர்வு என்ன என்பதுதான் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ கதைக்களம்.

Read More...
Paperback
Paperback 299

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

இந்துமதி

ஏராளமான பெண் வாசகர்களைத் தன் வசம் ஈர்த்தவர்களுள் ஒருவர் இந்துமதி. 100 நாவல்கள், 2 சிறுகதைத் தொகுப்புகள் எழுதியிருக்கிறார். பதினேழு வயதிலேயே எழுத்துக்குள் நுழைந்தவர். முதலில் ‘தீபம்’, ‘கணையாழி’, ‘தேன் மலர்’, ‘ஞானரதம்’ போன்ற சிறுபத்திரிகைகளில் கதை, கவிதைகள் எழுதினார். பிறகு தொடர்கதைகள் எழுதத் தொடங்கினார். இதிலிருந்துதான் இவருடைய எழுத்துப் பயணம் தீவிரம் கொள்ள ஆரம்பித்தது. “கதைகள் வெளியாகும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். திரும்பப் பிறந்த மாதிரி ஒரு சந்தோஷம். அந்த சந்தோஷத்தை வேறு எதனோடும் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது, அந்த மாதிரி ஓர் அனுபவம் அது. அந்த உற்சாகத்தில் மேலும் மேலும் எழுத ஆரம்பித்தேன்” என்கிறார் இந்துமதி.

Read More...

Achievements