Share this book with your friends

KILIYUGAM - UYIR URUGUM SATHTHAM / கிலியுகம் - உயிர் உருகும் சத்தம் இரண்டு நாவல்கள்/2 Novels

Author Name: RajeshKumar | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

கிலியுகம்

கலிவரதனின் வித்தியாசமான, விசித்திரமான நடவடிக்கைகளில் ஈர்க்கப்பட்டு அவனை குணப்படுத்தும் முயற்சியில் இறங்குகிறார் மனநல மருத்துவர் மிருத்தியுஞ்சன். அப்போது சில ஆச்சரியமான அமானுஷ்யமான சம்பவங்களை எதிர்க்கொள்கிறார்.

அதே சமயத்தில்,

அரசாங்க அதிகாரிகள் ஒருவர் பின் ஒருவருக்கு நேரும் பிரச்சனைகள். அவர்களுக்கு சம்பந்தபட்ட அனைவரும் அதன் காரணம் அறியாது விழிபிதுங்கி நிற்கின்றனர். போலீஸ் துறை அனைத்து திசையிலும் விசாரணையை முடுக்குகிறது.

குற்றவாளியை நெருங்க முடிந்ததா…?

கதை இரண்டு கிளைகளாக தனித்தனியே பயணிக்கிறது. அவை ஒன்றிணையும்போது நாம் திடுக்கிடுவதை  யாராலும் தடுக்கமுடியாது.

 

உயிர் உருகும் சத்தம்

இரண்டு பத்தரிகையாளர்கள் திண்டல் கிராமத்தில் நடக்கும்  அமானுஷ்யமான விஷயங்களை பற்றி கேள்விப்பட்டு, ஆய்வு கட்டுரை ஒன்றை செய்ய அந்த கிராமத்திற்கு  வருகிறார்கள்.அவர்கள் கேள்விப்பட்ட வீட்டின் அதிசய சக்தியை அறிந்து ஆச்சரியப்படுகிறார்கள். இப்படியும் நடக்குமா என்று அதிர்கிறார்கள். 

சென்னையில்  மர்மமான முறையில் ஒருவர்  கொலை செய்யப்படுகிறார். கொலையாளியை கண்டுபிடிக்கும் பொருட்டு போலீஸ் விசாரணை நடைப்பெறுகிறது. ஆனால், பல அதிர்ச்சிகரமான  திருப்பங்கள், நிகழ்வுகள்  நடக்கின்றன. அதனால், விசாரணை குழப்பமான சூழ்நிலையை அடைகிறது. 

அது ஏன் நடக்கிறது…? எதற்காக நடக்கிறது…? என்ற கேள்விகளுக்கு முதல் கிளை கதை பதிலளிக்கிறது.

Read More...
Paperback
Paperback 220

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

ராஜேஷ்குமார்

ஆர்.கே. என்னும் இந்த இரண்டு எழுத்துக்களுக்குள் அடங்கியிருக்கும் ராஜேஷ்குமார் என்னும் எழுத்தாளர் 1969ம் ஆண்டு தன்னுடைய 21 வயதில் எழுத ஆரம்பித்து 2019ல் தன்னுடைய எழுத்துலக வாசத்தின் 50வது ஆண்டாய் முடித்துக் கொண்டு இன்னமும் எழுதிக்கொண்டு இருப்பவர்.

1947-ம் ஆண்டு மார்ச் 20ம் தேதி பிறந்த இவர்க்கு பெற்றோர் இட்ட பெயர் ராஜகோபால். தாத்தாவின் பெயரான குப்புசாமியையும், அப்பாவின் பெயரான ரங்கசாமியையும் தன்னுடைய பெயரோடு இணைத்துக்கொண்டதின் காரணமாய் பள்ளி மற்றும் கல்லூரிகளில் சக மாணவர்களால் கே.ஆர்  என்று அழைக்கப்பட்டவர்.

பி.எஸ்ஸியில் தாவரவியலையும் பி.எட்டில் நேச்சுரல் சயின்ஸையும் முடித்து ஐந்தாண்டு காலம் ஆசிரியராய் பணி புரிந்த பிறகு அந்தப் பணியை ராஜினாமா செய்துவிட்டு அப்பாவுடன் இணைந்து கைத்தறிச்சேலை வியாபாரத்தில் தன்னை இணைத்துக் கொண்டவர்.  அதை கவனித்தபடியே கதைகள் எழுதியவர். 1973 முதல் 1980 வரை தன்னுடைய வியாபார விஷயமாக மாதம் ஒரு முறை இந்தியாவின் வடமாநில நகர்களுக்கு சென்று வந்ததின் விளைவாகவும் பலதரப்பட்ட மக்களையும், நிகழ்வுகளையும் சந்தித்ததின் பயனாகவும் பல கதைகள் அவர் மனதிலே உருவாகி சிறுகதைகளாகவும், நாவல்களாகவும் பல்வேறு நாளிதழ்களிலும் வார இதழ்களிலும் வெளிவந்தது.

Read More...

Achievements

+7 more
View All