Share this book with your friends

manasai thodum 10 kathaikal / மனசை தொடும் 10 கதைகள் சிறுகதைகளின் தொகுப்பு

Author Name: Melattur R Natarajan | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

உறவுகளின் மேன்மை, அறம் சார்ந்த நம் பன்பாட்டு விழுமியங்கள், சமூக சிக்கல்கள் ஆகியவைகளை சொல்லும் கதைகளுக்கு என்றுமே ஆதரவு உண்டு. 

இந்த புத்தகத்தில் உள்ள பத்து கதைகளும் உங்கள் மனதை தொடும் என்று நிச்சயம் நம்புகிறேன்.

சில ரகசியங்கள் என்கிற கதை ஆனந்த விகடனில் வந்த போது நிறைய பேர் தங்களது மாமாவை அடையாளம் கண்டு கொண்டார்கள். 

எருமை சவாரியில் இந்த உலகம் மனிதர்களுக்கு மட்டுமே சொந்தமானது என்கிற சுயநல பார்வையை கேள்வியில் வைக்கிறது. 

ஆட்டோ கதையில் சினிமா எப்படி பாமர மக்களை சுரண்டுகிறது என்பதை வெளிப்படுத்துகிறது.

அண்டங்க்காக்கை கதை தோல்வி கண்ட ஒரு சினிமாக்காரனின் வலியை படம் பிடித்து காட்டுகிறது

அனைத்து கதைகளும் உங்களை திருப்தி படுத்திவிட்டால்  அதை எனது வெற்றியாக கருதுவேன் 

Read More...
Paperback
Paperback 150

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

மெலட்டூர் இரா நடராஜன்

இந்தநூலின்தொகுப்பாளர் - மெலட்டூர்.இரா.நடராஜன்

பாரம்பரியம் மிக்க இசைக்கும், பரதத்திற்கும் பெயர் போன தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த மெலட்டூர் என்ற அழகிய கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர் இந்த நூலின் தொகுப்பாளர். இவரது சிறுகதைகள் பெரும்பாலான முன்னணி தமிழ் இதழ்களில் வெளியாகி பேரும் புகழும் ஈட்டியிருக்கின்றன. மனித நேயம், உறவுகளின் மேன்மை, நமது கிராமிய கலாச்சாரம் ஆகியவைகளை நுட்பமான உணர்வுகளோடு, எளிய எழுத்துக்களில் வடித்திருக்கிறார்.

தேசிய அளவிலான வங்கி ஒன்றில் மேலதிகாரியாக பணியாற்றிக் கொண்டு, பலவிதமான இலக்கியப் பணியை தொடர்ந்து செய்து வருபவர். இவர், சிறுகதைகளைத் தவிர பல சமுதாய/அரசியல்/ஆன்மீக கட்டுரைகள், கவிதைகள், மேடைநாடக/குறும்பட ஸ்கிரிப்டுகள் எழுதியிருக்கிறார். 

Read More...

Achievements

+5 more
View All