Share this book with your friends

mittai / மிட்டாய்

Author Name: Shafana | Format: Paperback | Genre : Poetry | Other Details

வாழ்க்கை 

எது வாழ்க்கை? எதற்காக வாழ்கிறோம்? அட... அதன் நோக்கம் தான் என்ன? காலை எழுந்ததும் பால் அதனை அம்மாவிடமும் செய்தித்தாளை அப்பாவிடமும் கொடுக்கும் குழந்தையிடம் அம்மாவிடம் இடம் அடுக்குகளை தான் அப்பதான் செய்தித்தாளை படிக்க வேண்டும் என பதியவைத்தவர் யார்? பிறப்பு - படிப்பு - பணம் - திருமணம் - குழந்தை - பின் அதன் வாழ்க்கை என்று மனித மனங்களுக்கு கடிவாளம் கட்டியது யார்? எங்கு சென்றாலும் ஏற்றத்தாழ்வுகளும் எதிர்பார்ப்புகளும் நம் ஆசைகளையும் கனவுகளையும் உடைக்கத்தான் செய்கிறது அதற்கென அஞ்சி கடமைகளுக்காக கனவுகளை விலைபேசி விற்றுவிடாதீர்கள் அப்படி விற்ற பின்னர் நீ பிழைத்திருக்கலாம் ஆனால் வாழ்ந்திருக்க மாட்டீர்கள்.  பிழைப்பதற்கும் வாழ்வதற்கும் வேறுபாடு தெரியாதெனில் வாழ்வே பிழையாகி போகும்.  குயிலின் கூட்டத்தில் மயிலாகி ஆடுவதும் குயிலாகவே கூவுவதும் உங்கள் விருப்பமே குயிலானாலும் மயிலானாலும் குதூகலமாய் மகிழ்ந்திருக்க மட்டும் மறவாதீர் வாழுங்கள் அடுத்தவரின் எதிர்பார்ப்புக்காக அல்ல அடிமனதின் ஆசைகளுக்காக.

Read More...
Paperback
Paperback 190

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

ஷபானா

ஷப்பூ என்று என்னைப் பிடித்தவர்கள் செல்லமாக அழைப்பார்கள்.  ஆனால் பெரும்பாலும் மக்களுக்கு நான் ‘எழுத்தாளர்’  என்றே அடையாளம்.  வாழ்க்கை புரட்டி எடுத்தது,  அப்போது வார்த்தைகள் கை கொடுத்தன.  காதல் கொண்டேன் வார்த்தைகள் மீது.  எனக்கு  வார்த்தைகள் கைகொடுத்தது மட்டுமல்ல என் வாழ்க்கையும் மாற்றின.  அப்போது தீர்மானித்தேன் “என் வார்த்தைகளை கொண்டு உலகை மாற்ற வேண்டும் என்று “

Read More...

Achievements