You cannot edit this Postr after publishing. Are you sure you want to Publish?
Experience reading like never before
Sign in to continue reading.
Discover and read thousands of books from independent authors across India
Visit the bookstore"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Palஇந்தப் புத்தகத்தை படித்து முடிக்கும்பொழுது நான் பயணம் செய்த இடங்களுக்கு நீங்களும் பயணம் செய்த அந்த உணர்வுகளை நிச்சயமாய் அடைவீர்கள்.
ஒரு பயணத்திற்கும் மற்றொரு பயணத்திற்கும் இடைப்பட்ட களைப்பை இன்னொரு பயணம் வந்துதான் தீர்க்கும் . பயணம் செய்யும் வரை பயணம் செய்யுங்கள், இறுதி பயணம் செய்யும் வரை.
வாழ்க்கை மீளவும் போவதில்லை குறிப்பிட்ட நாட்களுக்குப் பிறகு நீளவும் போவதில்லை. மீட்சிகளும் நீட்சிகளும் இல்லாத வாழ்க்கையைக் காட்சிபடுத்துங்கள் பயணத்தின் வழியே.
“வாழணும் , செமையா டிராவல் பண்ணினான்டா , அப்படிங்கிற மாதிரி வாழணும் யாருக்கும் தொந்தரவு இல்லாமல்.”
ரசிகவ் ஞானியார்
ஞானியார் சுபைர். திருநெல்வேலி மாவட்டத்தில் மேலப்பாளையம் என்கிற ஊரில் பிறந்தவர். யாருமே ரசிக்க முடியாமல் போயிருக்க வேண்டியவரை ரசிகவ் என்கிற பெயரில் இலக்கியத்தில் ஆர்வத்தை ஊட்டியது அவர் படித்த சதக்கத்துல்லா அப்பா கல்லூரி. தாயார் பெயர் ரசினா, தந்தையார் பெயர் கவ்பத்துல்லா, இருவருடைய பெயரையும் இணைத்து ரசிகவ் என்கிற புனைப்பெயரில் இலக்கியத்திலும் , இணையத்திலும் வலம் வருபவர்.
சவுதி அரேபியாவில் கணிப்பொறி துறையில் வேலை செய்து வருகிறார். இவர் எப்படி இருக்கிறார் என்று கேட்பதை விடவும் எங்கே இருக்கிறார் என்றுதான் கேட்க வேண்டும். உலகெங்கும் பயணம் செய்கிறார். பானிபட் இதயங்கள் மற்றும் தூக்கம் விற்ற காசுகள் என்கிற கவிதைப் புத்தங்களை வெளியிட்டிருக்கின்றார். ஒரு ஞானியின் பயணம் அவருடைய மூன்றாவது புத்தகம்.
மலை காடு அருவி பாலைவனம் போன்றவைகள்தான் இவருடைய முகநூல் முழுவதும் நிரம்பி இருக்கும். WeCanDo என்கிற பெயரில் நண்பர்களை குழுமமாக இணைத்து இயற்கை சீற்றங்களின் உதவிகள் கல்வி மற்றும் மருத்துவ உதவிகளை தேவைப்படுபவர்களுக்கும் தேவையை நிறைவேற்றத் தயாராக இருப்பவர்களுக்கும் இடையே பாலமாக இருக்கிறார்.
The items in your Cart will be deleted, click ok to proceed.