Share this book with your friends

Oru Murai Thaan / ஒரு முறை தான்!

Author Name: Dr. Imalayen | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

ஒருமுறைதான் இது இலக்கணம் இல்லாத இலக்கியம் இல்லாத கட்டுரைகளை தொடாத கதைகளை சொல்லாத கவிதைகளை பாடாத வாழ்க்கையின் தேடலையும் பற்றியும் வாழ்க்கையில் நிதர்சனங்களை நாடவும் வடிவமைக்கப்பட்டு எழுதப்பட்ட ஒரு புத்தகமாகும். இந்த புத்தகம் ஒரு மணி நேரத்தில் எழுதி முடிக்கப்பட்டது. வாழ்க்கை என்பது என்ன எதை தேடினாலும் ஓடுகிறோம் எதை நாட வேண்டும் எதை தவிர்க்க வேண்டும் என்பதை பற்றியும் இது பேசுகிறது. இந்தப் புத்தகத்தில் ஒத்தடைப்புகளோ அல்லது தலையங்கங்களோ இருக்காது என்பதை முன்னரே உங்களுக்கு தெரியப்படுத்த விரும்புகிறேன். இந்த புத்தகத்தை எழுத எனக்கு மிகவும் ஊக்கமாக இருந்த என் தமிழ் ஆசிரியர்கள் இருவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த புத்தகத்தை வடிவமைப்பதிலும் தட்டச்சு செய்து இதனை புத்தகமாக வெளியிடுவதற்கான முழு ஒத்துழைப்பை நல்கிய என் அன்பு இளவல் மதிப்பிற்குரிய திரு பிரபாகரன் அவர்களுக்கும் மதிப்பிற்குரிய திரு பாஸ்கரன் அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை இந்த வேலையில் தெரிவித்துக் கொள்கிறேன். புத்தகத்தை தேர்வு செய்து வாசித்துக் கொண்டிருக்கும் நீங்கள் இதனை வாங்கி படிக்கும் ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு நொடியும் இது உங்களுக்கு கண் முன் இருக்கும் கண்ணுக்கு புலப்படாத பல ரகசியங்களை உடைத்து பேச காத்திருக்கிறது. வாழ்வின் பொருள் வாழ்வின் ரகசியம் நம்மை நாம் அறியும் அவசியம் அனைத்தையும் பற்றியும் பேசி இருக்கும் இந்த புத்தகத்தை வாங்கி வாசித்து பாருங்கள் இதை நிச்சயம் உங்களுக்கு அர்த்தமுள்ளதாக அமையும். இதை வாசிக்க வாங்க முற்படும் உங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் வாழ்த்துக்கள்

Read More...
Paperback
Paperback 150

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

டாக்டர். இமாலயன்

வணக்கம் அன்பு உறவுகளே நான் எழுத்தாளர் டாக்டர் இமாலயன் சென்னை தமிழ்நாட்டில் இருந்து. அடிப்படையில் நான் ஒரு பள்ளி மாணவர்களுக்கான ஆசிரியர், மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான தமிழ் ஆங்கிலம் பொருளியல் வணிகவியல் வரலாறு சமூகவியல் உளவியல் புவியியல் போன்ற பாடங்களை எடுக்கும் திறன் பெற்றவன். இளங்கலை மற்றும் முதுகலை படிக்கும் மாணவர்களுக்கு தமிழ் ஆங்கிலம் வணிகவியல் சார்ந்த அனைத்து பாடங்கள் பொருளியல் மற்றும் மேலாண்மை சார்ந்த அனைத்து பாடங்களையும் என் கடந்த காலங்களில் எடுத்தும் நிகழ்காலத்தில் என் ஆசிரியர் பணியை மேற்கொண்டும் வருகிறேன். நான் என்னுடைய மேல்நிலைப் படிப்பை தூய துவமா மேல்நிலைப் பள்ளியில் முடித்து, என்னுடைய இளங்கலை பொருளியல் படிப்பை சென்னை லயோலா கல்லூரியில் நிறைவு செய்தேன். முதுகலை பொருளியல் படிப்பை சிக்கிம் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வியின் வாயிலாக படித்து முடித்தேன். தமிழ் இலக்கியவியல் படிப்பில் இளங்கலை புலவியல் படிப்பை முதல் தேர்ச்சியில் வெற்றிகரமாக முடித்தேன், இதனை கோயம்புத்தூரில் அமைந்துள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் படித்து முடித்தேன். பொருளியல் படிப்பில் தத்துவ பேரறிஞர்கான எம்ஃபில் பட்டத்தையும் பெற்றது உள்ளேன். முனைவர் பட்டத்திற்கான பிஹெச்டி ஆய்வை பொருளியல் பாடத்தில் நமது இந்திய தேசத்தில் மத்திய பிரதேசம் மாநிலம் எந்த ஊரில் அமைந்துள்ள டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டு வருகிறேன். எழுத வேண்டும் என்கிற ஆற்றல் நான் எப்பொழுது எழுதத் தொடங்கினேனோ அப்பொழுது இருந்து என்னைப் பற்றிக் கொண்டு இப்போது வரை என்னுடன் பயணித்து வருகின்றது. என்னை பாதித்த நிகழ்வுகளையும் நான் கற்றுக் கொண்ட அறிவையும் பிறருக்குத் தருவதில் பெரும் இயம்புதலை கொண்டவனாக நான் இருக்கிறேன். தமிழ் இலக்கணத்தை முறையே படித்தவன் என்கிற முறையில் தமிழ் மீது மாறாத பற்றும் தீராத காதலும் எப்போதும் கொண்டுள்ளேன். என்னுடைய எழுத்துக்களும் நான் உங்களுக்கு படைத்தளிக்கும் புத்தகங்களும் உங்கள் சிந்தனை வேர்களில் நீர் பாய்ச்சி உங்கள் அறிவில் வெளிச்சத்தை ஏற்றும் என்று நம்புகிறேன். என் படைப்பை பார்வையிட்டு படித்து பயன் பெற வந்திருக்கும் உங்களுக்கு என் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் நன்றி வணக்கம்.

Read More...

Achievements

+3 more
View All