Share this book with your friends

Pesum mounangal / பேசும் மெளனங்கள் (இனிய கவிதைகளின் திரட்டு)

Author Name: P. Periyar Mannan | Format: Paperback | Genre : Poetry | Other Details

கவிஞர். பெ. பெரியார்மன்னன் எழுதிய கவிதைகளை தொகுத்து ‘பேசும் மெளனங்கள்’ என்ற தலைப்பில் இந்நுாலை வெளியிட்டுள்ளார். இந்த கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள அத்தனை கவிதைகளும் மாலையாய் கோர்த்த முத்துக்கள்.  எளிய வார்த்தைகளை கோர்த்து அருமையான வரிகளில் நவரசங்களையும் கவிதை வடிவில் தந்துள்ளார். இந்நுால் அனைத்து தரப்பினருக்கும் உற்சாகத்தையும், உத்வேகத்தையும் உறுதியாய் கொடுக்கும். நுாலை வாசிப்போரையும் கவிதை படைக்கத் துாண்டும் என்பது திண்ணம்.

Read More...
Paperback
Paperback 150

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

கவிஞர்.பெ.பெரியார்மன்னன்

இந்நுால் ஆசிரியர் கவிஞர்.பெ.பெரியார்மன்னன், குழந்தைகள் ராகத்துடன் ஆடிப்பாடி விரும்பி கற்கும் விதத்தில், சிறார் பாடல்கள், நன்னெறி கற்பிக்கும் சிறுகதைகள் மற்றும் கதைப்பாடல்கள் எழுதி, சிறுவர் இலக்கிய நுால்களை வெளியிட்டு வருகிறார். பிரபல புத்தக நிறுவனமான நியூசெஞ்சுரி புத்தக நிறுவனம், 2013–ல் இவரது முதல் படைப்பான ‘மழலைக்காவியம்’ நுாலையும், 2017–ல் ‘கிள்ளைமொழி’ சிறார் பாடல்கள் நுாலையும் வெளியிட்டது. கிள்ளைமொழி நுாலுக்கு ‘கவிதைஉறவு’ இலக்கிய இதழின் சிறந்த குழந்தை இலக்கியத்திற்கான விருது கிடைத்தது.  மத்திய அரசின் நிறுவனமான ‘சாகித்ய அகடமி’ 2020–ல் வெளியிட்ட ‘சிறுவர் கதைப்பாடல்கள்’ நுாலில் இவரது ‘மழலைக்காவியம்’ நுாலில் இருந்து 3 பாடல்கள் இடம்பெற்றுள்ளது. இவர் 2016–ல் ‘கவிதைப்பூக்கள்’, 2017–ல் ‘கவிதை சிற்பங்கள்’ என்ற கவிதைகள் தொகுப்பு நுால்களையும், ‘பொம்மை’ சிறுகதை தொகுப்பு நுாலையும் வெளியிட்டுள்ளார். 2020–ல் ‘நோஷன் பிரஸ்’ புத்தக வெளியிட்டு நிறுவனம், குழந்தைகளுக்கான இவரது  ‘ஊஞ்சல்’ சிறார் பாடல் நுாலை இணைய வழியில் வெளியிட்டுள்ளது.

Read More...

Achievements

+8 more
View All