Share this book with your friends

sathurangam / சதுரங்கம்

Author Name: P.mathiyalagan | Format: Paperback | Genre : Poetry | Other Details

வாழ்க்கையின் வலியும், வேதனையும் நம்மை மரணத்தைப் பற்றி சிந்திக்க வைக்கிறது. பால்யத்தில் பெற்றிருந்த சிறகுகளை சமூகம் பறித்துக் கொள்கிறது. ஒவ்வொரு விடியலும் துயரச் சிலுவையை பரிசளிக்கிறது. வாழ்க்கையில் எப்போது வசந்தம் வீசும் என்று முள்படுக்கையில் படுத்தபடி யோசிக்கிறேன். வாழும் வரை வலையில் சிக்கிய மீன்களாகத்தான் இருக்க வேண்டியதை எண்ணி நான் நாட்களை கடத்துகிறேன்.

Read More...
Paperback
Paperback 175

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

ப.மதியழகன்

திருவாரூர் மாவட்டம் – மன்னார்குடி எனும் நகரத்தைச் சேர்ந்தவர் ப.மதியழகன். நாகை வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக்கில் மெக்கானிக்கல் பிரிவில் டிப்ளமா பெற்றவர். தமிழ் பல்கலைக்கழகத்தில் பி.லிட் முடித்துள்ளார் கீற்று, வார்ப்பு, திண்ணை, உயிரோசை, பதிவுகள், பதாகை, மலைகள் ஆகிய இணைய இதழ்களிலும், நவீன விருட்சம், அம்ருதா, தாமரை, இனிய உதயம் ஆகிய இலக்கிய இதழ்களிலும், குங்குமம் போன்ற வெகுஜன இதழ்களிலும் இவரது கவிதைகள் வெளிவந்துள்ளது. சிவஒளி ஆன்மிக இதழில் அறுபத்து மூவர் பெரியபுராண தொடர் எழுதி வருகிறார்

முதல் கவிதை தொகுப்பு ‘தொலைந்து போன நிழலைத் தேடி’ 2008ல் வெளிவந்தது. இரண்டாவது கவிதை தொகுப்பு ‘சதுரங்கம்’ 2011ல் வெளிவந்தது.மூன்றாவது கவிதை தொகுப்பு ‘புள்ளிகள் நிறைந்த வானம்’ 2017ல் வெளிவந்தது. நான்காவது கவிதைகளும், கட்டுரைகளும் சேர்ந்த தொகுப்பாக துயர்மிகு வரிகள் எனும் தலைப்பில் 2017ல் வெளிவந்தது. ஐந்தாவது கவிதை தொகுப்பாக சாத்தானின் வேதம் 2019 ஜூலை மாதம் வெளிவந்தது, ஆறாவதாக நந்தி எனும் 25 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 2019 செப்டம்பர் மாதம் வெளிவந்தது இணைய இதழ்களில் இவரது சிறுகதைகளும் வெளிவந்துள்ளது.

தற்போது மன்னார்குடியில் தேசிய மேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராக வேலை செய்து வருகிறார்.

Read More...

Achievements