Share this book with your friends

Sindhaa Nadhi / சிந்தா நதி நினைவலைகள்

Author Name: La. Sa. Ramamirutham | Format: Paperback | Genre : Biographies & Autobiographies | Other Details


சிந்தா நதி என்கிற தலைப்பு, உள்ளத்தில் எவ்வாறு தோற்றம் கண்டது?


வாரா வாரக் கட்டளைக்கு எவ்வாறு என் எழுத்துப் படிந்தது?


நினைவு, எடுக்க எடுக்க அடியே காண முடியா இத்தனை பெரிய பேழையா?


இன்னும் நான் மீளா வியப்புக்கள்.


ஆனால் எல்லாவற்றிலும் ஆச்சரியம், வாசகர்கள், ஆரம்பத்திலிருந்தே, இந்தத் தொடருக்குக் காட்டிய அமோகமான ஆதரவுதான்.


சம்பிரதாயமாகப் பத்திரிகைக்கு வரும் பாராட்டுக்கள் தவிர, என் பேருக்குத் தனிப்பட்ட முறையில் வந்த, இன்னமும் வந்துகொண்டிருக்கும் கடிதங்களிலும்.


வீட்டுக்கும்,


தற்செயலாக நான் வெளியூர் போக நேர்ந்த போது, நான் வந்திருப்பது எப்படியோ தெரிந்து பலப்பல தூரங்களிலிருந்தும்,


என்னைக் காண வந்தவர்கள், சிந்தா நதியின் அலைகளில், தங்கள் நெஞ்ச நெகிழ்ச்சிகளை இதயப்பாளங்களை, பரிமளங்களை, சஞ்சலங்களை அடையாளம் கண்டுகொண்டது பற்றியும், சிந்தா நதி ஸ்னானத்தில் அவர்கள் அடைந்த அமைதி, ஆறுதல், தைரியம் பற்றியும்,


மனம் திறந்து வெளியிட்டுக் கொண்ட போது, அது ஒன்றும் நான் மார் தட்டிக் கொள்ளும் விஷயமாக இல்லை. ஏதோ வேளைக் கூரில், சொல்லின் மந்திரக்கோல் பட்டு இந்த அலைகள், வாசகனின் தருணத்துக்கேற்றபடி, ஆத்மாவின் திறவுகோலாக அமைந்திருக்கையில், ஒருவிதமான அச்சம்தான் காண்கிறது. தரிசன பயம், மானுடத்தின்மேல் மரியாதை.


Reverence for life


இந்த நிலைகளின் தூய்மையை ஆய நான் தக்கோன் அல்லன். இதோ நிறுத்திவிட்டேன்.


மண்டையைப் பிய்த்துக்கொள்ளும் கட்டங்கள் பற்றிப் பணிவுடன்,அழுத்தமாக ஒன்று சொல்ல விரும்புகிறேன்.


புரிந்தது, புரியாதது இந்த இரண்டு நிலைகளுக்கும் உண்மையிலேயே என்ன வித்தியாசம் இருக்கிறது? இரண்டுமே தற்காலிக நிலைகள். -

லா.ச.ரா

Read More...
Paperback
Paperback 300

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

லா. ச. ராமாமிருதம்

லா.ச.ரா என்று அழைக்கப்பட்ட லா. ச. ராமாமிர்தம் (அக்டோபர் 30, 1916 - அக்டோபர் 30, 2007) தமிழ் எழுத்தாளர். இவருடைய முன்னோர்கள் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த லால்குடியைச் சேர்ந்தவர்கள் என்பதால் தன்னுடைய பெயரை லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம் என்பதன் சுருக்கமாக ல.ச.ரா என்ற பெயரில் எழுதிவந்தார். 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 நாவல்கள், 2 வாழ்க்கை வரலாற்று நூல்கள் உள்பட பல நூல்களை லா.ச.ரா எழுதியுள்ளார். இவர் மணிக்கொடி காலத்திலிருந்தே எழுதி வந்தவர்.இவர், தனது 92வது பிறந்த நாளில் இறந்தார்

Read More...

Achievements

+15 more
View All