Share this book with your friends

SIR… ORU SANTHEGAM! - Part 2 / ஸார்... ஒரு சந்தேகம்! - பாகம் 2 அறிவியல் கேள்விகளுக்கு அற்புத பதில்கள் / Ariviyal Kelvigaluku Arpudha Bathilgal

Author Name: RajeshKumar | Format: Paperback | Genre : Philosophy | Other Details

1500க்கும் மேற்பட்ட நாவல்கள் 2000க்கும் அதிகமான சிறுகதைகள்  எழுதிய எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் அசாத்திய உழைப்பால் உருவான அறிவியல் கேள்விகளும்- பதில்களும் அடங்கிய தொகுப்பு. இந்த புத்தகத்தை படித்தவர்கள், எதையும் கேள்வி கேட்டு கற்பதில் விற்பன்னர் ஆகி விடுவார்கள்.

இதோ அவரின் வார்த்தைகளில், இந்த புத்தகத்தைப் பற்றி... 

அன்புக்குரிய வாசக நெஞ்சங்களே...! உங்கள் கைகளில் இப்போது இடம் பிடித்துள்ள "ஸார்..! ஒரு சந்தேகம்" வாசகர்கள், முகநூல் நண்பர்கள் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள பல பள்ளிகளைச் சார்ந்த ஆசிரியர்களும் மாணவ மாணவிகளும்,கேட்ட பல அரிய அறிவியல்   கேள்விகளுக்கு அதற்கு எளிய முறையில் புரியும் வகையில் பதில்களை சிறப்பாக கொடுக்க முடிந்ததில் மிகுந்த மனநிறைவு கொள்கிறேன். இந்த அறிவியல் புத்தகம், தினமும் நாம் எதிர்கொள்ளும் பல விஷயங்களின் அடிப்படை உண்மைகளை விளக்குகிறது.இறகு எடை காகிதத்தில் உருவான இந்த புத்தகம்..... கண்ணுக்கும் கைக்கும் தொடர்பை ஏற்படுத்தும் அறிவுப் பாலம்.

ஒரு விஷயத்தை கஷ்டப்பட்டும் கற்கலாம்... மகிழ்ச்சியாகவும் கற்கலாம்... அது அமையும் ஆசானைப் பொறுத்தது. அறுதியிட்டு சொல்வேன்.. இந்த புத்தகம் பின்னே சொன்ன வகையைச் சார்ந்தது.

கற்றலின் தொடக்கப் புள்ளி.. இதோ உங்கள் கைகளில்!

என்றும் அன்புடன் 

ராஜேஷ்குமார்

Read More...
Paperback
Paperback 395

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

ராஜேஷ்குமார்

ஆர்.கே. என்னும் இந்த இரண்டு எழுத்துக்களுக்குள் அடங்கியிருக்கும் ராஜேஷ்குமார் என்னும் எழுத்தாளர் 1969ம் ஆண்டு தன்னுடைய 21 வயதில் எழுத ஆரம்பித்து 2019ல் தன்னுடைய எழுத்துலக வாசத்தின் 50வது ஆண்டாய் முடித்துக் கொண்டு இன்னமும் எழுதிக்கொண்டு இருப்பவர்.

1947-ம் ஆண்டு மார்ச் 20ம் தேதி பிறந்த இவர்க்கு பெற்றோர் இட்ட பெயர் ராஜகோபால். தாத்தாவின் பெயரான குப்புசாமியையும், அப்பாவின் பெயரான ரங்கசாமியையும் தன்னுடைய பெயரோடு இணைத்துக்கொண்டதின் காரணமாய் பள்ளி மற்றும் கல்லூரிகளில் சக மாணவர்களால் கே.ஆர்  என்று அழைக்கப்பட்டவர்.

பி.எஸ்ஸியில் தாவரவியலையும் பி.எட்டில் நேச்சுரல் சயின்ஸையும் முடித்து ஐந்தாண்டு காலம் ஆசிரியராய் பணி புரிந்த பிறகு அந்தப் பணியை ராஜினாமா செய்துவிட்டு அப்பாவுடன் இணைந்து கைத்தறிச்சேலை வியாபாரத்தில் தன்னை இணைத்துக் கொண்டவர்.  அதை கவனித்தபடியே கதைகள் எழுதியவர். 1973 முதல் 1980 வரை தன்னுடைய வியாபார விஷயமாக மாதம் ஒரு முறை இந்தியாவின் வடமாநில நகர்களுக்கு சென்று வந்ததின் விளைவாகவும் பலதரப்பட்ட மக்களையும், நிகழ்வுகளையும் சந்தித்ததின் பயனாகவும் பல கதைகள் அவர் மனதிலே உருவாகி சிறுகதைகளாகவும், நாவல்களாகவும் பல்வேறு நாளிதழ்களிலும் வார இதழ்களிலும் வெளிவந்தது.

Read More...

Achievements

+7 more
View All