Share this book with your friends

TAMIL VALARTHA GNANIYAARADIKAL / தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்

Author Name: Vallikannan | Format: Paperback | Genre : Biographies & Autobiographies | Other Details

ஞானியாரடிகள் பற்றி புரிதல் தோன்றியது முதல் அவரைப் பற்றிய வரலாறுகளையும், அவர் எழுதிய புத்தகங்கள் எவை என்றும் ஆராய முற்பட்டேன். திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் மடாலயத்தின் நினைவில் வாழும் ஏழாம் குருநாதர், ஐந்தாம் பட்டத்து ஞானியாரடிகளின் நாற்றாண்டு நினைவு மலரை சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு என்னிடம் தந்தார். மேலும் அடிக்கடி மடத்திற்கு செல்லும் வாய்ப்பும் எனக்கு ஏற்பட்டது. ஞானியாரடிகளின் குருபூசைச் சொற் பொழிவுகளில் நானும் கலந்து கொள்வதுடன் தீபம், நா. பார்த்தசாரதியையும் கலந்துக் கொண்டு சொற்பொழிவு ஆற்ற ஏற்பாடு செய்தேன். நா. பா. அவர்கள் ஞானியாரடிகளின் நினைவு மலரை படித்துவிட்டு சுமார் இரண்டு மணி நேரம் ஆழமான கருத்துக்களை தெளிவான நடையில் சொற்பொழிவு ஆற்றிய நிகழ்ச்சி என் மனதில் மேலும் தேடலை உருவாக்கியது.

Read More...
Paperback
Paperback 299

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

வல்லிக்கண்ணன்

வல்லிக்கண்ணன் (ரா.சு. கிருஷ்ணசாமி, நவம்பர் 12, 1920 - நவம்பர் 9, 2006) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். இவரது தந்தை ரா.மு. சுப்பிரமணிய பிள்ளை, தாய் மகமாயி அம்மாள். 1930களிலும், 40களின் துவக்க ஆண்டுகளிலில் லோகசக்தி, பாரதசக்தி போன்ற பத்திரிகைகளில் வல்லிக்கண்ணன் கதைகளும், உணர்ச்சிகரமான கட்டுரைகளும் பாடல்கள் என ரா. சு. கிருஷ்ணஸ்வாமி என்றும், ராசுகி என்ற பெயர்களில் எழுதத்துவங்கினார். அந்தச் சமயத்தில் தனக்கு ஒரு புனைபெயர் தேவை என எண்ணினார். இதையடுத்து அவரது சொந்த ஊரான ராஜவல்லிபுரத்தில் உள்ள வல்லியையும் கிருஷ்ணஸ்வாமி என்ற தன்பெயரை கண்ணன் என மாற்றி இரண்டையும் இணைத்து, வல்லிக்கண்ணன் என்ற பெயரில் எழுதத்தொடங்கியவர். எழுத்தாளராக வேண்டும் என்பதற்காகவே அரசுப் பணியிலிருந்து விலகியவர். அரசுப் பணியிலிருந்து விலகிய பின்னர் தொடக்கத்தில் இதழ்களில் ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளார். பின்னர் சிறுகதை, நாவல், குறுநாவல், கட்டுரை என ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். இவருடைய சிறுகதைகளில் சில ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. இவருடைய பெரிய மனுஷி எனும் சிறுகதை அனைத்து இந்திய மொழிகளிலும் நேரு பால புத்தக வரிசையிலும் வெளிவந்துள்ளது. இவர் எழுதிய "வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2002 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சிறுகதை எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

Read More...

Achievements

+15 more
View All