Share this book with your friends

Thenmazhai Saralai / தேன்மழைச் சாரலாய் 2022

Author Name: Nandhini Sugumaran | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

வணக்கம் தோழமைகளே..

தேன்மழைச் சாரலாய்.. காதலை மட்டுமே மையப்படுத்தி எழுதிய கதை.

நாயகன் - தேன்மொழியன் (இனியன்)
நாயகி - சாராவதி (சாரல்)

நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மொழியனின் வாழ்வில் எதிர்பாராத விதமாக இணையும் சாரா.

தமக்கை மற்றும் தங்கையின் குடும்பம், தந்தை, ஒரே ஒரு நண்பன் வருண் எனச் சிறு கூட்டுக்குள் வாழும் நாயகன்.

தனக்குப் பின்னே பிறந்தவனைத் தவிர வேறு எவரையுமே அறியாத நாயகி.

சூழ்நிலையின் காரணமாகச் சாரலை சேயாகத் தன்மடி தாங்கும் மொழியனுக்கும் அவளுக்கும் இடையேயான உணர்வுப் போராட்டமே தேன்மழைச் சாரலாய்.

பொறுப்பை மட்டுமே சுமப்பவனுக்குள் காதல் மலர.. அதை அறியாத பேதையோ மொழியனின் வாழ்வில் இருந்து விலகி கருப்பைப் பகிர்ந்தவனுடன் இடம் பெயர்கிறாள்.

பிரிவின் ஏக்கத்தில் தன்னைத் தொலைப்பவளுக்குக் காலம் புது அரிதாரம் பூசி.. பழயவளையே மீட்டெடுக்க, பெண்மைக்குள் காலம் கடந்து, விலகியவனைப் பற்றி ஒன்றும் அறியாமலேயே காதல் பூக்கிறது.

தொலைத்த அவனும், தொலைந்த அவளும் இணைந்தார்களா என்பதே கதை!

இவள்
நந்தினி சுகுமாரன்.

Read More...
Paperback
Paperback 350

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

நந்தினி சுகுமாரன்

வணக்கம் வாசக தோழமைகளே..

நான் நந்தினி சுகுமாரன். இது எனது புனைப்பெயர். நந்தினி என்ற பெயரின் மீது ஏற்பட்ட ஈர்ப்பால் அதனோடு எனது தந்தையின் பெயரை இணைத்து, புனைப்பெயரில் எழுதி வருகிறேன்.

நேரம் கடத்துவதற்காக வாசிக்க துவங்கி, பின் அதுவே என் முழுநேர சுவாசமாகிப் போனது. வாசித்த கதைகளின் தாக்கத்தால் எனக்குள்ளும் கற்பனைகள் வளரத் துவங்கின. நான்காண்டுகள் வாசகியாக மட்டுமே இருந்த நான், 2018 ஆண்டு செப்டம்பர் மாதம் எனது எழுத்துப் பயணத்தைத் துவக்கினேன். இதுவரை 2 குறுநாவல், 15 முழுநாவல்கள், சில சிறுகதைகள் எழுதியுள்ளேன்.

நோஷன் பிரஸ் என்ற இணையதள வெளியீட்டின் மூலம் எனது சொந்த முயற்சியில் 10 நாவல்கள் புத்தகங்களாக வெளிவந்துள்ளன. AD பதிப்பகத்தின் மூலமாக ரகசியமாய் சுவாசிக்கிறேன் உனையே நாவல் வெளிவந்துள்ளது. 

முகநூல் வாசகர்களுக்கும் சற்று அறிமுகமான நபர்தான்.

'நந்தினி சுகுமாரன்' என்ற பெயரைப் பின்தொடர்ந்து, எனது தொடர்கதைகளை வாசிக்கலாம். வாசகர்கள் தரும் கருத்துக்களே மிகப்பெரும் அங்கீகாரம் எழுத்தாளருக்கு.

nandhinisugumarannovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் எனது எழுத்தைப் பற்றிய தங்களின் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

என்றும் உங்கள்..

நந்தினி சுகுமாரன்.

Read More...

Achievements

+6 more
View All