Share this book with your friends

Viralodu Veenai / விரலோடு வீணை

Author Name: Indumathi | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

கல்லூரியில் சக வகுப்புத் தோழிகள் தொடங்கி வீட்டில் அப்பா வரை ஷைலஜா எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்பட்டுத்தான் ஆக வேண்டும். அப்படி ஒரு பிடிவாதக்காரி. பேரழகியும்கூட. அப்படிப்பட்டவள், விஸ்வம் என்கிற விஸ்வநாதனின் மேல் காதலில் விழுகிறாள். விஸ்வம் ஒரு பணக்கார வீட்டுப் பையன். அவனது அப்பா சின்னசாமி செட்டியாரின் டெக்ஸ்டைல்ஸ் கடையில்தான் தனது தந்தை சிங்காரம்பிள்ளை சேல்ஸ்மேனாகப் பணிபுரிவதும் பின்னாளில் அவளுக்குத் தெரியவருகிறது. சாதி, அந்தஸ்து காரணமாக ஷைலஜாவை ஒதுக்கி, விஸ்வத்துக்கு அவனது வீட்டினரும் உறவுகளும் சேர்ந்து அத்தை மகள் மல்லிகாவைத் திருமணம் முடிக்க முடிவெடுக்கின்றனர். விஸ்வத்துடன் ஷைலஜா சேர்ந்தாளா இல்லையா என்பதுதான் இந்தக் கதை.

Read More...
Paperback
Paperback 399

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

இந்துமதி

ஏராளமான பெண் வாசகர்களைத் தன் வசம் ஈர்த்தவர்களுள் ஒருவர் இந்துமதி. 100 நாவல்கள், 2 சிறுகதைத் தொகுப்புகள் எழுதியிருக்கிறார். பதினேழு வயதிலேயே எழுத்துக்குள் நுழைந்தவர். முதலில் ‘தீபம்’, ‘கணையாழி’, ‘தேன் மலர்’, ‘ஞானரதம்’ போன்ற சிறுபத்திரிகைகளில் கதை, கவிதைகள் எழுதினார். பிறகு தொடர்கதைகள் எழுதத் தொடங்கினார். இதிலிருந்துதான் இவருடைய எழுத்துப் பயணம் தீவிரம் கொள்ள ஆரம்பித்தது. “கதைகள் வெளியாகும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். திரும்பப் பிறந்த மாதிரி ஒரு சந்தோஷம். அந்த சந்தோஷத்தை வேறு எதனோடும் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது, அந்த மாதிரி ஓர் அனுபவம் அது. அந்த உற்சாகத்தில் மேலும் மேலும் எழுத ஆரம்பித்தேன்” என்கிறார் இந்துமதி.

Read More...

Achievements