Share this book with your friends

Vivek Vishnu Konjam Vibareetham / விவேக் விஷ்ணு கொஞ்சம் விபரீதம்

Author Name: Rajeshkumar | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

தான் துப்பறியும் வழக்குகளில் தன் அறிவார்ந்த அணுகுமுறை மற்றும் நுண்ணறிவான விசாரணையால் எளிதாக குற்றவாளியை கண்டு பிடிக்கும் க்ரைம் ப்ரான்ச் அதிகாரி விவேக்குக்கும் அவனுடன் பணிபுரியும் விஷ்ணுவுக்கும், மண்ணில் புதைக்கப்பட்ட தலை பற்றி செய்தி ஒரு புலனாய்வு பத்திரிக்கையாளர் மூலம் தெரிய வருகிறது. அது எங்கு புதைக்கப்பட்டது ? எதற்காக புதைக்கப்பட்டது ? என தெரியாமல் விசாரணையை துவங்கியவுடனே விவேக்குக்கு புரிகிறது, இந்த வழக்கு ஒரு பெரிய விபரீதத்தை நோக்கி பயணிக்கிறது என்று. ஃபாரன்சிக் தரும் ஆய்வு முடிவுகள், பதற வைக்கின்றன. இதற்கிடையே டாக்டர் ருத்ரபதி தன் உதவியாளர்கள் ஹரி மற்றும் சுபத்ராவுடன் சேர்ந்து நினைவிழந்த நிலையில் இருக்கும் பெண்ணை ஒரு புதுமையான சிகிச்சை கொண்டு குணப்படுத்த முயற்சி செய்கிறார்கள். அந்த பெண்ணின் கணவன் அவளைத் தேடி வர, அது அனைவர்க்கும் பெரும் பிரச்சனையில் போய் முடிகிறது. 
அது என்ன சிகிச்சை ? அந்த பெண் யார் ? அந்த பிரச்சனை என்ன? 
விவேக், விஷ்ணு இருவரும் பயணிக்கும் பாதையில் ஏகப்பட்ட விடையில்லா வினாக்கள். மனித மூளை மரணத்திற்கு பிறகு என்னாகும்? 
இறப்பில்லா வாழ்க்கை சாத்தியமா? 
ஜாவார பழங்குடி மக்களின் எலும்புகள் தேடும் மருத்துவர்.. ஏதற்காக? மனித தலையில் என்ன இருந்தது? 
பிராஸ்தட்டிக் விஷயங்களுக்கும் நைஜீரியாவுக்கும் என்ன தொடர்பு?, 
ஒரு அரசியல்வாதியின் மர்ம மரணம்? 
க்ளாஸ்டோரியம் பொட்டவீனம் என்றால் என்ன? 
விடைகள் கிடைக்குமா ? 
அந்த விடைகளில் குற்றவாளிகள் சிக்குவார்களா? இந்த மெகா கதை ஆழ்கடல் அமைதியும் ஒரு சூறாவளியின் பேரிரைச்சல் கொண்டது.

Read More...
Paperback
Paperback 375

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

ராஜேஷ்குமார்

ராஜேஷ்குமார், 1947-ம் ஆண்டு மார்ச் 20ம் தேதி கோவை மாநகரில் பிறந்தவர். இவரின் இயற்பெயர் ராஜகோபால். பின்னர் எழுத்துக்காக ராஜேஷ்குமார் எனும் புனைப்பெயர் கொண்டார். இதுவரை 1500 நாவல்கள் 2000 சிறுகதைகள் எழுதியுள்ளார். இவற்றைத்தவிர நூற்றுக்கணக்காண அறிவியல்,ஆன்மிக மற்றும் வாழ்வியல்  கட்டுரைகள் படைத்துள்ளார். அவற்றில் “ஸார் ஒரு சந்தேகம்!” , “வாவ் ! ஐந்தறிவு”, “சித்தர்களா! பித்தர்களா!!”  முக்கியமானவை.

பி.எஸ்ஸியில் தாவரவியலையும் பி.எட்டில் நேச்சுரல் சயின்ஸையும் முடித்து ஐந்தாண்டு காலம் ஆசிரியராய் பணி புரிந்த பிறகு அந்தப் பணியை ராஜினாமா செய்துவிட்டு தன் தந்தை செய்த கைத்தறிச்சேலை வியாபாரத்தில் தன்னை இணைத்துக் கொண்டவர்,  அதை கவனித்தபடியே கதைகள் எழுதினார்.இவரின்  முதல் சிறுகதை 1969ம் வருடம் மாலை முரசு கோவை பதிப்பில் வெளிவந்தது. 1980வது வருடம் இவருடைய முதல் நாவல் மாலைமதி மாத இதழில் வெளிவந்தது. நாவலின் தலைப்பு வாடகைக்கு ஓர் உயிர். அதே 1980வது வருடம் கல்கண்டு வார இதழில் ஏழாவது டெஸ்ட் ட்யூப் என்ற  முதல் தொடர்கதை வெளியானது.

1980லிருந்து 1995 வரை தமிழ்நாட்டில்  41 மாத நாவல்கள் வெளிவந்தன. அனைத்திலும் ராஜேஷ்குமார் தொடர்ந்து எழுதியதின் விளைவு 1998ம் ஆண்டே 1000மாவது நாவலைத் தொட்டுவிட்டார்.

 இவரது  எழுத்து படிக்க எளிமையாகவும், படித்தவுடனேயே புரிந்து கொள்ளும்படியாக இருப்பதால் பாமர வாசகர்களும் படிக்கிறார்கள். அதேபோல் பல்துறை வல்லுனர்களும் படிக்கிறார்கள் வாசிக்கிறார்கள்.

சில தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளும், நாவல்களும் பிராந்திய மொழிகளிலும், ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. இவருடைய நாவல்களை  பல பல்கலைக்கழக மாணவர்கள் பி.எச்டி. படிப்பில் ஆய்வுக்காக எடுத்துக் கொண்டு டாக்டர் பட்டம் பெற்று இருப்பது சிறப்பு.

இவருடைய  நாவல்கள் பல திரைப்படங்களாகவும்  தொலைக்காட்சித்   தொடர்களாகவும்  தயாரிக்கப்பட்டுள்ளன. இவரது படைப்புக்கள் அச்சுப்புத்தகங்களாக மட்டுமின்றி  மின்புத்தகங்களாகவும் ஒலிப்புத்தகங்களாகவும் அடுத்த தலைமுறைக்கு கிடைக்கின்றன. எழுத்துலகில் இவர் ஆற்றிய  சாதனையை இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் 2022ல் அங்கீகரித்துள்ளது. இவர்க்கு தமிழக அரசு, 2010ல் கலைமாமணி விருது வழங்கி சிறப்பு செய்துள்ளது.

Read More...

Achievements

+7 more
View All