Share this book with your friends

ANIYUM MANIYUM / அணியும் மணியும் இலக்கியக் கட்டுரைகள்

Author Name: R. Seenivasan | Format: Paperback | Genre : Letters & Essays | Other Details

அணியும் மணியும் மற்றும் புகழேந்தி நளன் கதை

இந்நூலில் 11 + ...கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. தமிழ் இலக்கியத்தின் நயங்களையும், கருத்துகளையும், செய்திகளையும் சுருக்கித் தருகிறது. இலக்கியம் சிறப்படைவதற்கு அது உணர்த்தும் செய்திகள், அணிநயங்கள், உணர்வுகள், கற்பனைகள் காரணம் ஆகின்றன.

சங்க இலக்கியம் முதல் திரு.வி.க. வரை அவ்வவ் இலக்கியங்களின் தனிச் சிறப்புகளை ஒவ்வொரு கட்டுரையும் காட்டுகின்றன. ஒரு நூலில் பல சிறப்புகள் இருந்தாலும் அதற்கே உரிய அழகு நயம் எது என்று காட்டுவதில் இந்நூல் தனித் தன்மை பெற்றிருக்கிறது.எழிலும் எளிமையும் கூடிய செந்தமிழ் நடையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

ரா. சீனிவாசன்

Read More...
Paperback
Paperback 398

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

ரா. சீனிவாசன்

டாக்டர் ரா. சீனிவாசன் பச்சையப்பன் கல்லூரியில் 1940 முதல் 45 வரை மாணவர்;1945 முதல் 1981 வரை தமிழ்த்துறைப் பேராசிரியர், தலைவர்.அவர் எழுத்துப் பல துறைகளில் இயங்கி வருகிறது; மொழியியல், தமிழ் இலக்கணம், கட்டுரை நூல்கள், நாவல்கள், நாடகம், புதுக்கவிதை எனப் பல துறைகளிலும் அவர் நூல்கள் வெளிவந்துள்ளன; ‘சங்க இலக்கியத்தில் உவமைகள்’ என்னும் ஆய்வு நூல் மூன்று பதிப்புகளைக் கண்டது; மொழியியல் பத்துப் பதிப்புகளைக் கண்டது; அவர் எழுதிய உரைநடை நூல்களுள் ‘அணியும் மணியும்’ இன்னும் பாராட்டப்படுகிறது. அக்கட்டுரை நூலும், ‘சொல்லின் செல்வன்’ என்னும் நாடக நூலும், ‘வழுக்கு நிலம்’, ‘நனவோட்டங்கள்’ என்னும் நாவல்களும் பல்கலைக் கழகப்பாடநூல்களாக அவ்வப்பொழுது வைக்கப்பட்டு வருகின்றன; எழுத்து, அவர் தொடர் பணியாய் இருந்துவருகிறது.

1991 முதல் கம்பராமாயணம், மகாபாரதம், சீவக சிந்தாமணி முதலிய காவியங்கள் உரைநடையாக்கம் பெற்றன.

Read More...

Achievements

+15 more
View All