Share this book with your friends

ARUMUGAMANA PORUL / ஆறுமுகமான பொருள்

Author Name: Tho. Mu. Baskara Thondaiman | Format: Paperback | Genre : Letters & Essays | Other Details

1. கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்
கி. வா. ஜகந்நாதன்
2. ஆறு முகமான பொருள்
தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்

ஆசிரியர், "ஆறு முகமான பொருள்" என்ற கட்டுரையில் குணங்கள் அல்லது எலக்ட்ரான்களின் ஆறு கூறும் என்பவற்றின் உருவகமே ஆறு முகங்கள் என அறிவியல் வழிநின்று விளக்குகின்றார்கள். இந்த அறிவியல் காலத்திற்கு இத்தகைய விளக்கமன்றோ தேவை.

ஆறுபடை வீடு என்பதில் அறுமுகன் அடியார்களிடத்தில் குழப்பம் நிலவுகின்றது. ஆற்றுப்படை என்பதில் ‘ற்’ ஐ விட்டுவிட்டு ஆறுபடை என்று கூறிப் பின்பு படைக்கு வீடமைத்து அறுபடை வீடாக்கி விட்டார்கள் என மிக்க நயமாகக் கூறுகிறார்கள். "என்னுடன் வாருங்கள் முருகன் திருக்கோலத்தையும் திருத்தலப் பெருமையையும் காட்டுகிறேன்" என்று ஆறுபடை வீட்டிற்கும் நம்மை அழைத்துச் சென்று காட்டுகிறார்கள். எந்தச் செலவும் பயணத் துன்பமும் இல்லாமல் ஆறு திருத்தலக் காட்சியை அனுபவிக்கும்படி செய்துவிடுகிறார்கள். முருகன் குறிஞ்சி வேந்தனாகத் தோன்றி எப்படி எல்லாம் ஏனைய நிலங்களுக்கு வந்தான் என்ற செய்தியையும் அற்புதமாக விளக்கியுள்ளார்கள்.

Read More...
Paperback

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

அமரர். கலைமணி. தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் தமிழ் கூறும் நல்லுலகுக்கு நன்கு அறிமுகமானவர். அவரது தமிழ்ப்பணியும் கலைப்பணியும் தமிழக வரலாற்றில் புகழ் அத்தியாயங்கள் என்று ஓர் அன்பர் சொன்னார். முற்றிலும் உண்மை. தஞ்சாவூரில் அவர் உருவாக்கிய கலைக்கூடமும், தமிழ்மக்களுக்கு அவர் விட்டுச் சென்றிருக்கும் நூல்களுமே அதற்குச் சான்றுகளாகும். குற்றால முனிவர். ரசிகமணி டி.கே.சி.யின் பிரதம சீடரான அவர் ஆக்கித்தந்துள்ள இலக்கியப் படைப்புகளும், கலைப்படைப்புகளும் தமிழுக்கும், கலையுலகுக்கும் கிடைத்த அரிய பொக்கிஷங்கள்.

Read More...

Achievements

+15 more
View All