Share this book with your friends

BODHI MADHAVAN ( Life of Buddha) / போதி மாதவன் (புத்தர் வரலாறு) தம்ம பதம்

Author Name: P. Ramaswamy | Format: Paperback | Genre : Letters & Essays | Other Details

1, புத்தரின் வாழ்க்கை வரலாறு
2. போதிமரம் (சரித்திர நாவல்) - சத்யானந்தம்
3. தம்ம பதம்  - அடங்கிய நூற்கள்.

234. நீ (அடைக்கலம் புகுவதற்கான) ஒரு தீவை [1] தயாரித்துக்கொள்; விரைவாக முயற்சி செய்; அறிஞனாக இரு. உன் மலங்கள் துடைக்கப்பட்டுப் பாவங்கள் நீங்கியதும் நீ மேலோர் தங்கும் சுவர்க்கத்தை அடைவாய்.(2)

235.உன் வாழ்க்கை முடியப் போகிறது. எமன் சந்நிதிக்கு நீ வந்துவிட்டாய். வழியிலே தங்கும் இடமும் வேறில்லை. நீயோ செல்லும் வழிக்கு வேண்டிய உணவு எதுவும் தயாரிக்கவில்லை.(3)

236. நீ (அடைக்கலம் புகுவதற்கான) ஒரு தீவைத் தயாரித்துக் கொள்; விரைவாக முயற்சி செய்; அறிஞனாக இரு. உன் மலங்கள் துடைக்கப்பட்டுப் பாவங்கள் நீங்கியதும், மறுபடி பிறப்பும் மூப்பும் உனக்கில்லை.(4)

 
237. தட்டார் வெள்ளியின் அசுத்தங்களைப் போக்குதல் போல, மேதாவியானவன் தன் மாசுகளைக் கொஞ்சங் கொஞ்சமாக, முறையாக, அவ்வப்போது நீக்கி வரட்டும்.(5)

238.இரும்பிலிருந்து துரு தோன்றினும், அதை அது அரித்து விடுகிறது; அதுபோலவே (அற நெறி) பிறழ்ந்தவனை அவனுடைய கருமங்களே தீய கதியில் கொண்டு சேர்க்கின்றன.(6)

239. மந்திரத்தின் குறை பாராயணம் செய்யாமை;

வீட்டின் குறை பழுது பாராமை;
அழகின் குறை சிரத்தையின்மை;
காவலாளியின் குறை கவனக்குறைவு.
(7)

240. பெண்ணுக்கு இழுக்கு தீய நடை; கொடையாளிக்கு இழுக்கு கருமித்தனம்; தீச்செயல் யாவும் இம்மையிலும் மறுமையிலும் இழுக்குடையவை.(8)

Read More...
Paperback
Paperback 799

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

ப. ராமஸ்வாமி

'பாம்பின் கால் பாம்ப்றியும்' என்ற முதுமொழிக்கிணங்க, தான்பிரீனின் போராட்ட உணர்வினை எமது போராளிகள் மத்தியிலும் தொற்றவைக்கும் நோக்கில் தான்பிரீன் பற்றிய நூலை எங்கிருந்தோ முத்துக் குளித்து கண்டெடுத்தவர், தமிழீழப் போராளிகளின் தளபதிகளில் ஒருவர். அதனை மக்களிடையே பரப்பும் நோக்கில் நூலாக்கம் செய்யவென, பிரதி எடுத்து வைத்திருந்தார் மற்றுமொரு தமிழிழப் போராளி. ஆனால் துரதிஷ்ட வசமாக, அவர்கள் எண்ணம் நிறைவேறுமுன்பாகவே, வீரமரணமடைந்துவிட்டனர்; அந்த இருவர் வாழ்க்கையும் கூட இன்று வரலாறுகிவிட்டது. எனினும், அவர்களின் அந்த உணர்வு பல்லாயிரம் போராளிகளை உருவாக்கியுள்ளது என்பதில் சந்தேகமில்லை. அவ்விருவரதும் உடனடி நோக்கமான நூல் வெளியீடு இன்று கைகூடுகிறது. இதுபோலவே அவர்களதும், அவர்களை ஒத்த பலரதும், பரந்துபட்ட மக்களதும் இலக்கான விடுதலையை அடைந்தே தீருவோம் என்பது திண்ணம்.

பிரதியெடுக்கப்பட்ட கையெழுத்துப்பிரதியே எமக்குக் கிடைத்த நிலையில் அதன் ஆசிரியர் பற்றி அதிற் குறிக்கப்படாமையால் நூலாசிரியர் பெயர் தெரியாதிருந்தது. எனினும் நூலில் இடம்பெற்ற 'ஒரு வார்த்தை', முன்னுரை ஆகியவற்றின் ஊடாக, 1932 - 34 காலப் பகுதியில் நூலாசிரியர் திருச்சிச் சிறையில் அரசியல் கைதியாக இருந்த காலத்தில் எழுதியுள்ளார் என்பது புலனாகிளது. மேலும், முன்னுரையிலிருந்து, நூலாசிரியர், தான்பிரீன் நூலைத் தவிரவும் மைக்கேல் காலின்ஸ் பற்றியும், டொரென்ஸ் மாக்ஸ்வினியின் சுதந்திரத் தத்துவங்கள் பற்றியும் எழுதியிருப்பது தெரியவந்தது. இதனடிப்படையில் தேடிப்பார்க்கையில் மைக்கேல் காலின்ஸ் கிடைத்தது. அதனைப் படித்துப் பார்த்ததில் அந்நூலில் உள்ள குறிப்புகளினூடாகவும், தான்பிரீன் பற்றிய நூலையும், மைக்கேல் காலின்ஸ் நூலை எழுதிய திரு. ப. ராமஸ்வாமி என்பவரே எழுதினார் என்ற முடிவிற்கு வரவேண்டியுள்ளது.

Read More...

Achievements

+15 more
View All