Share this book with your friends

ILAKKIYAMPATTI THIRAPU KUCHCHIGAL 2 / இலக்கியம்பட்டி திறப்புக் குச்சிகள் 2

Author Name: Kaappiya Vaasipagam | Format: Paperback | Genre : Letters & Essays | Other Details

பல்வேறு எழுத்தாளர்கள் மற்றும் பல்துறை ஆளுமைகளின் அனுபவக்கட்டுரைகள்

Dr. ஷாலினி - 'பேன்ட், ஷர்ட் போட்ட மெட்ராஸ் பெண்' என்பதாலேயே சில பல சிக்கல்களைச் சந்திக்க நேர்ந்தது. ஆனாலும் புதிய ஊரின் அத்தனை பயங்களையும் போக்கி, என் அறிவியல் பார்வையை மேலும் மேலும் செழுமைப்படுத்தியவர் பேராசிரியர் கோவர்தனன். கூடுதல் பொறுப்புக்களைக் கொடுத்து என் திறமைகளை வளர்த்தவரும் அவரே. நான் படித்து முடித்து சைக்கியாட்ரிஸ்ட் ஆகி, எல்லோரையும்போல வெளிநாட்டுக்குப் போக வேண்டும் என யோசிக்க ஆரம்பித்தபோது, 'இந்தியாவிலேயே இருந்து நோயாளிகளைப் பார். ஒரு மருத்துவருக்குப் புத்தகமே நோயாளிகள்தான்' என்று எனக்கு அறிவுறுத்தினார் மனநல மருத்துவர் முத்தழகன். அது என் மருத்துவர் வாழ்வின் மிக முக்கியத் தருணத்தில் வழங்கப்பட்ட முக்கியமான அறிவுரை.
அதை மதித்து, அடுத்த மாதமே 'மைண்ட் ஃபோகஸ்' என்கிற மனநல கிளினிக்கை ஆரம்பித்து, பிராக்டிஸ் செய்தபடியே பிஹெச்.டி., ஆராய்ச்சியையும் துவக்கினேன். இந்த ஆராய்ச்சி என்னை எத்தனையோ வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்று, பலதரப்பட்ட மனிதர்களைச் சந்தித்து, பயனுள்ள பல விஷயங்களைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்புக்களை உருவாக்கியது. இதனால், என் பார்வை வட்டம் விரிந்துகொண்டே போனது.
நான், என் வீடு, என் குடும்பம், குட்டி என்று சின்னக் குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டாமல், உபயோகமாக ஏதாவது செய்யும் ஆர்வம் அதிகரிக்க... 'மனநலச் சேவை மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை' என்கிற ஒன்றை உருவாக்கி, பல கிராமங்களுக்குப் போய் பொதுமக்களிடம் பணியாற்றியபோதுதான் கவனித்தேன்... 

Read More...
Paperback
Paperback 999

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

காப்பியா வாசிப்பகம்

83 - இனப்படுகொலைக்கு முன் அறவழிப் போராட்டமும், ஆயுதப் போராட்டமும் கலந்திருந்த காலத்திலேயே தலைமறைவு வாழ்க்கைக்கு தயார் என ஒவ்வொருவரும் தனக்குத் தானே கட்டளை இட்டுக் கொண்டனர். உலகின் விடுதலைக்காக போராடும் இயக்கங்களுக்கெல்லாம் மிகச் சிறந்த காத்திரமான கட்டுப்பாட்டுடனும், ஒழுக்கத்துடனான வாழ்வுப் போருக்கும் முன்னுதாரணமாக திகழும் எல்டிடிஇ வருகை, வளர்ச்சி 83 இல் மக்களோடு இரண்டறக் கலந்து மக்கள்தான் எல்டிடிஇ எல்டிடிஇ தான் மக்கள் என்கிற விடுதலைப் போராட்டத்திற்கு பெருவாரியான மக்கள் *மண்ணுக்காக மரணிப்போம் என கிளர்ந்தெழுந்தார்கள்.

எல்லாவற்றையும் இழந்துவிட்ட நானும் எனது 11வது அகவையில் நண்பர்களுடன் சேர்ந்து சாவதற்கு சத்தியம் செய்தேன். பாலர் வகுப்பு முதல் பல்கலைக்கழகம் வரை என்னோடு நெருங்கிய நண்பர்கள் யாரும் உயிரோடு இல்லை. இராணுவ மொழியில் சொல்வதென்றால் அவர்கள் காணாமல் போனார்கள். கடந்த 33 ஆண்டுகளாக இடப்பெயர்வான சுற்றோடி வாழ்வும் - புலம் பெயர்ந்த வாழ்வும் என் பின்னால் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன. வாழ்வின் நீள் பாதையில் எல்லாவற்றுக்கும் முகம் கொடுத்து வாழப் பழகிக் கொண்டேன்.

மறைந்து வாழவும், இழந்து வாழவும், இறந்து வாழவும், பழகிக் கொண்ட நான், இந்த இகழ் வாழ்வில் இன்று பதுங்கி வாழவோ, நிமிர்ந்து வாழவோ பலமும் இல்லை பயமமுமில்லை என்ற நிலையில் உள்ளேன். உடலும் உள்ளமும் தளர்ந்து போனாலும் ஏதோ ஒரு நம்பிக்கையில் வாழவும் தமிழ் சமூகத்துக்கு ஒன்றைச் செய்ய முடியும் என்ற விருப்பவியல் குருதித் தொனியில் தோணியில் வந்த காலம் கரைகிறது.

85 முதல் இன்று வரை ஓடித்திரியும் வாழ்வில் பல கவிதைகளும் கட்டுரைகளும் காணாமல் போனது. இதழ்களை தேடுவதும் சாத்தியமில்லை. இதழ் நடத்தியவர்களும் சேகரிப்பாளர்களும் உயிரோடு இருந்தால்தானே தேடுவதற்கு. வாழ்வதற்கே போராடும் மனிதர்களிடத்தில் எதைத் தேடி அலைவது. நான் சேகரித்த நூலகமும் எழுதியவைகளும் காலப்போக்கில் அனலிலும் புனலிலும் கரைந்தது ஒரு பக்கம் என்றால், பேரினவாத அரசால் பத்திரிகை சுதந்திரமும் எழுத்தாளர்களும் தடை செய்யப்படுவதும், கொல்லப்படுவதும், நூல்கள் எரியூட்டப்படுவதும் இன்று வரை தொடர்ந்த வண்ணம் இருக்கையில், நானும் என் கவிதைகளும் தப்புவது எம்மாத்திரம்?நானும் எல்லாவற்றுக்கும் ஆளானேன். எல்லாவற்றையும் ஞாபகப்படுத்தி எழுதி விடலாம் என்ற நம்பிக்கை மட்டும் இன்னும் முகிலாய் இருக்கிறது.

Read More...

Achievements

+15 more
View All