Share this book with your friends

ILLAMTHORUM IDHAYANGAL (Novel) / இல்லம்தோறும் இதயங்கள் நாவல்

Author Name: Su. Samudram | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

சமூகப் பிரச்னைகளையும், அரசியல் அவலங்களையும், அதிகாரிகளின் அத்துமீறல்களையும் நிர்வாக அமைப்புகளின் சீர்கேடுகளைப் பற்றியும் சிரிப்பாகவும், சீறிப் பாய்ந்தும், நலிந்தோர், மெலிந்தோர், வறியோர், வாழ்க்கைப் போராட்டங்களைப் பற்றியுமே நிறைய தன் கதைகளில் எழுதிவரும் சமுத்திரம் அவர்கள் “இல்லம்தோறும் இதயங்கள்” நாவலில் குடும்பப் பாங்கான கதையோட்டமாக அமைத்து, குடும்ப உறவு மனிதர்கள் சிலரின் குரூர மனங்களை உரசி உறைத்துக் காட்டுகிறார்.

குணக்குன்றான ஒரு இளம் தாய், பிறந்த வீட்டாராலும், புகுந்த வீட்டாராலும், கணவனாலும் பாராட்டப்படும் புகழ் வாழ்வு வாழ்ந்து வந்தவள், ஒரு நோயால் பாதிக்கப்படும் போது கணவனாலும், கணவன் வீட்டு குடும்பத்தாராலும் எப்படியெல்லாம் சிதைக்கப்படுகிறாள், சீரழிக்கப்படுகிறாள் என்பதைப் படிக்கும்போது கண்கள் குளமாகின்றன. மனித நேயமில்லாமல் இந்த மனிதர்கள் நடந்துகொள்ளும் விதம் நெஞ்சை வெடிக்கச் செய்கிறது.

Read More...
Paperback
Paperback 250

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

சு. சமுத்திரம்

சு.சமுத்திரம் தென்காசி மாவட்டம் தென்காசி வட்டம் திப்பணம்பட்டி கிராமத்தில் பிறந்தவர். அவர் அகில இந்திய வானொலியிலும் தூர்தர்ஷனினிலும் வேலை பார்த்தவர். அவர் 14 புதினங்கள், 4 குறுநாவல்கள், 2 கட்டுரைத் தொகுப்புகள், ஒரு நாடகம், 300க்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். அவரது சிறுகதைகள் 22 தொகுப்புகளாகப் பிரசுரிக்கப்பட்டுள்ளன அவரது பல படைப்புகள் தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அவர் ஒரு சோஷியலிசவாதி. அவரது படைப்புகளில் சோஷியலிசக் கருத்துக்கள் பரவியிருந்தது. அடிமட்டத்து மக்களின் வாழ்க்கையும் அவர்கள் பட்ட துன்பங்களும் அவரது படைப்புகளின் முக்கியக்களமாக அமைந்தன. 1990ல் அவரது புதினம் வேரில் பழுத்த பலா சாகித்திய அகாதமி விருது பெற்றது. 2003ல் சென்னையில் அவர் ஒரு விபத்தில் காலமானார்

Read More...

Achievements

+15 more
View All