Share this book with your friends

NAALADIYAAR / நாலடியார்

Author Name: O. Putparatha Chettiyar | Format: Paperback | Genre : Letters & Essays | Other Details

அங்கண் விசும்பின் அகல்நிலாப் பாரிக்கும்
     திங்களும் சான்றோரும் ஒப்பர்மன் - திங்கள்
     மறுவாற்றம்சான்றோர் அஃதாற்றார் தெருமந்து
     தேய்வர் ஒருமாசு உறின்.

     (இ-ள்.) அம் கண் விசும்பின் - அழகான இடமுள்ள வானத்தில், அகல் நிலா பாரிக்கும் - விரிவான நிலாவை நிரப்புகின்ற, திங்களும் சான்றோரும் - சந்திரனும் பெரியோர்களும், ஒப்பர் மன் - பெரும்பாலும் சமானமாவார்கள்; திங்கள் மறு ஆற்றும் - சந்திரன் களங்கத்தைப் பொறுக்கும், சான்றோர் அஃது ஆற்றார் - பெரியோர் அதனைப் பொறார்; ஒரு மாசு உறின் - ஒரு குற்றம் நேர்ந்தால், தெருமந்து தேய்வர் - வருந்தி மெலிந்து போவர், எ-று.

     நிலா என்பதைக் கீர்த்திக்கு ஆகுபெயராக்கி "அங்கண் விசும்பினகனிலாப் பாரிக்கும்" என்பதைச் சான்றோருக்குங் கூட்டிக் கொள்க. சந்திரன் தேய்ந்தாலு மறுபடி வளர்கின்றான்; சான்றோரோ தேய்ந்தே போவார் என்பதும் சிறப்பு. இப்படிப்பட்ட சிறப்புகளைப் பற்றித் தான் மன் என்றது, [நன். இடை. சூ. 13; பொது. சூ. 27] விதியால் திங்கள் என்கிற அஃறிணையும் சான்றோர் என்கிற உயர்திணையும் ஒப்பர் என்று ஒரு முடிபு ஏற்றது; திங்களைத் தேவனென்று குறித்தால் இது வழாநிலையேயாம்.

Read More...
Paperback
Paperback 499

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

உரையாசிரியர்- ஊ.புட்பரதச் செட்டியார்

 காப்பியா வாசிப்பகம்

உயிரைக் காக்க ஓடாத நாள் வேண்டும்

83 இனப்படுகொலைக்கு முன் அறவழிப் போராட்டமும், ஆயுதப் போராட்டமும் கலந்திருந்த காலத்திலேயே தலைமறைவு வாழ்க்கைக்கு தயார் என ஒவ்வொருவரும் தனக்குத் தானே கட்டளை இட்டுக் கொண்டனர். உலகின் விடுதலைக்காக போராடும் இயக்கங்களுக்கெல்லாம் மிகச் சிறந்த காத்திரமான கட்டுப்பாட்டுடனும், ஒழுக்கத்துடனான வாழ்வுப் போருக்கும் முன்னுதாரணமாக திகழும் எல்டிடிஇ வருகை, வளர்ச்சி 83 இல் மக்களோடு இரண்டறக் கலந்து மக்கள்தான் எல்டிடிஇ எல்டிடிஇ தான் மக்கள் என்கிற விடுதலைப் போராட்டத்திற்கு பெருவாரியான மக்கள் *மண்ணுக்காக மரணிப்போம் என கிளர்ந்தெழுந்தார்கள்.

எல்லாவற்றையும் இழந்துவிட்ட நானும் எனது 11வது அகவையில் நண்பர்களுடன் சேர்ந்து சாவதற்கு சத்தியம் செய்தேன். பாலர் வகுப்பு முதல் பல்கலைக்கழகம் வரை என்னோடு நெருங்கிய நண்பர்கள் யாரும் உயிரோடு இல்லை. இராணுவ மொழியில் சொல்வதென்றால் அவர்கள் காணாமல் போனார்கள். கடந்த 33 ஆண்டுகளாக இடப்பெயர்வான சுற்றோடி வாழ்வும் புலம் பெயர்ந்த வாழ்வும் என் பின்னால் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன. வாழ்வின் நீள் பாதையில் எல்லாவற்றுக்கும் முகம் கொடுத்து வாழப் பழகிக் கொண்டேன்.

மறைந்து வாழவும், இழந்து வாழவும், இறந்து வாழவும், பழகிக் கொண்ட நான், இந்த இகழ் வாழ்வில் இன்று பதுங்கி வாழவோ, நிமிர்ந்து வாழவோ பலமும் இல்லை பயமமுமில்லை என்ற நிலையில் உள்ளேன். உடலும் உள்ளமும் தளர்ந்து போனாலும் ஏதோ ஒரு நம்பிக்கையில் வாழவும் தமிழ் சமூகத்துக்கு ஒன்றைச் செய்ய முடியும் என்ற விருப்பவியல் குருதித் தொனியில் தோணியில் வந்த காலம் கரைகிறது.

85 முதல் இன்று வரை ஓடித்திரியும் வாழ்வில் பல கவிதைகளும் கட்டுரைகளும் காணாமல் போனது. இதழ்களை தேடுவதும் சாத்தியமில்லை. இதழ் நடத்தியவர்களும் சேகரிப்பாளர்களும் உயிரோடு இருந்தால்தானே தேடுவதற்கு. வாழ்வதற்கே போராடும் மனிதர்களிடத்தில் எதைத் தேடி அலைவது. நான் சேகரித்த நூலகமும் எழுதியவைகளும் காலப்போக்கில் அனலிலும் புனலிலும் கரைந்தது ஒரு பக்கம் என்றால், பேரினவாத அரசால் பத்திரிகை சுதந்திரமும் எழுத்தாளர்களும் தடை செய்யப்படுவதும், கொல்லப்படுவதும், நூல்கள் எரியூட்டப்படுவதும் இன்று வரை தொடர்ந்த வண்ணம் இருக்கையில், நானும் என் கவிதைகளும் தப்புவது எம்மாத்திரம்?நானும் எல்லாவற்றுக்கும் ஆளானேன். எல்லாவற்றையும் ஞாபகப்படுத்தி எழுதி விடலாம் என்ற நம்பிக்கை மட்டும் இன்னும் முகிலாய் இருக்கிறது.

Read More...

Achievements

+15 more
View All