Share this book with your friends

Nalliravuch Seithigal Vaasippadhu Dhurga / நள்ளிரவுச் செய்திகள் வாசிப்பது துர்கா

Author Name: RajeshKumar | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

நள்ளிரவு செய்திகள் வாசிப்பது துர்கா.

 

இது நாவல் அல்ல......

ஒரு யுத்த களம்.

 

நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் நீளமான 

யுத்தம். 

இந்த யுத்த களத்தில் போரிடுவது இரண்டு நாடுகள் அல்ல.....

இரண்டு உயிரினங்கள்.

ஒரு உயிரினம் ஆறறிவு படைத்த மனிதன்.

இன்னொரு உயிரினம் அரை உயிரியான அபாயகரமான வைரஸ்.

இந்த அரையுயிரி உயிர் வாழ வேண்டுமென்றால் 

அதற்கு தேவைப்படும் உணவு மனிதனின் செல்கள்.

 

ஒட்டுமொத்த மருத்துவ விஞ்ஞானத்தையும் ஏமாற்றிவிட்டு 

மனிதனின் உடம்பை தன்னுடைய உறைவிடமாகவும் உணவுக் கூடமாகவும் மாற்றிக்கொள்ள முயற்சி செய்யும் இந்த அபாயகரமான வைரஸ்களை ஒழித்துக்கட்டி வெற்றிபெற விஞ்ஞானிகள் முயற்சி செய்கிறார்கள்.

ஆனால் வெற்றி பெறும் வேளையில் தோற்றுப் போய்விடுகிறார்கள். 

 

 இதற்குக் காரணம் Bio war எனப்படும் இந்த உயிரியல் யுத்தத்திற்குப்

பின்னால் சில நாடுகள் அந்த அபாயகரமான வைரஸ்களோடு கூட்டணி வைத்துக் கொள்வது தான்.

 

அப்படி கூட்டணி வைத்துக் கொண்டதால் 

ஏற்பட்ட விளைவுகளைத்தான் 

நள்ளிரவு செய்தி துர்கா 

இந்த நாவலின் 

ஒவ்வொரு வரியிலும் நீங்கள் வியப்பில் உறைந்து போகும்படி கதை சொல்லப் போகிறாள்.

ஆனால்.......

இது கதையல்ல.....

எதிர்காலத்தில் நடக்கப் போகிற நிஜம்.

 

Read More...
Paperback
Paperback 600

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

ராஜேஷ்குமார்

ஆர்.கே. என்னும் இந்த இரண்டு எழுத்துக்களுக்குள் அடங்கியிருக்கும் ராஜேஷ்குமார் என்னும் எழுத்தாளர் 1969ம் ஆண்டு தன்னுடைய 21 வயதில் எழுத ஆரம்பித்து 2019ல் தன்னுடைய எழுத்துலக வாசத்தின் 50வது ஆண்டாய் முடித்துக் கொண்டு இன்னமும் எழுதிக்கொண்டு இருப்பவர்.

1947-ம் ஆண்டு மார்ச் 20ம் தேதி பிறந்த இவர்க்கு பெற்றோர் இட்ட பெயர் ராஜகோபால். தாத்தாவின் பெயரான குப்புசாமியையும், அப்பாவின் பெயரான ரங்கசாமியையும் தன்னுடைய பெயரோடு இணைத்துக்கொண்டதின் காரணமாய் பள்ளி மற்றும் கல்லூரிகளில் சக மாணவர்களால் கே.ஆர்  என்று அழைக்கப்பட்டவர்.

பி.எஸ்ஸியில் தாவரவியலையும் பி.எட்டில் நேச்சுரல் சயின்ஸையும் முடித்து ஐந்தாண்டு காலம் ஆசிரியராய் பணி புரிந்த பிறகு அந்தப் பணியை ராஜினாமா செய்துவிட்டு அப்பாவுடன் இணைந்து கைத்தறிச்சேலை வியாபாரத்தில் தன்னை இணைத்துக் கொண்டவர்.  அதை கவனித்தபடியே கதைகள் எழுதியவர். 1973 முதல் 1980 வரை தன்னுடைய வியாபார விஷயமாக மாதம் ஒரு முறை இந்தியாவின் வடமாநில நகர்களுக்கு சென்று வந்ததின் விளைவாகவும் பலதரப்பட்ட மக்களையும், நிகழ்வுகளையும் சந்தித்ததின் பயனாகவும் பல கதைகள் அவர் மனதிலே உருவாகி சிறுகதைகளாகவும், நாவல்களாகவும் பல்வேறு நாளிதழ்களிலும் வார இதழ்களிலும் வெளிவந்தது.

Read More...

Achievements

+7 more
View All