Share this book with your friends

Panam Panam Panam / பணம் பணம் பணம் உங்களை பணக்காரராக விடாமல் தடுக்கும் விஷயங்கள் -அவற்றை தாண்டி செல்லும் வழிகள்

Author Name: Sundaresan Murugan | Format: Paperback | Genre : Biographies & Autobiographies | Other Details

நான் உங்களை பணக்காரராக விடாமல் தடுக்கும் விஷயங்களை அவற்றை எப்படி தாண்டி நீங்கள் செல்வந்தராவது என்பதையே –அதற்கான ப்ராக்டிக்கல் தீர்வுகளையே  அதிகம் சொல்லப் போகிறேன். 

ஒரு கனவு காண்பவானாக – எழுத்தாளனாக – கவிஞனாக – தத்துவவாதியாக – தேடல் நிறைந்த மனிதனாக இருந்த நான்  பணம் குறித்த ஆராய்ச்சியில் இறங்க வெற்றி பெற (ஆராய்ச்சியில் மட்டுமல்ல பண வேட்டையிலும்) காரணம்… 

பண விஷயத்தில் நான் செய்த  தவறுகள் –அதனால் ஏற்பட்ட  ஏழ்மை மட்டுமில்லை.  என்னால் பயன் பெற்று பல மடங்கு பலன் பெற்றும் சிறிதளவு உதவியை கேட்டாலும் அதை மறுத்த நண்பர்கள், உறவினர்கள் எல்லோருமே இந்த விஷயத்தில் என் ஆச்சாரியர்கள் தான் . உதவியை மறுக்க அவர்கள் சொன்ன காரணங்களை பொய்யென்றே கருதி ஒரு காலகட்டம் வரை அவர்களை வெறுத்தாலும் அதன்பிறகே அந்த பொய்களில் சற்று உண்மையும் இருப்பதை உணர்ந்தேன். 

என்னை போலவே அவர்களும் பணம் பற்றிய எந்த புரிதலும் –தெளிவு – விழிப்புணர்ச்சியும் இல்லாமல்தான் குப்பை கொட்டிக் கொண்டிருக்கிறார்கள்- அதிர்ஷ்ட வசமாக இதை எல்லாம் மீறி ஏதோ கொஞ்சம் பைசா வைத்திருக்கிறார்கள் அதை இழக்கவும் ரொம்ப காலம் பிடிக்காது  என்பதை உணர்ந்தேன்.

Read More...
Paperback
Paperback 295

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

சித்தூர் முருகேசன்

ஆசிரியரை பற்றி …

வேலூரை அடுத்துள்ள சித்தூரை (ஆந்திரமானிலம்) சேர்ந்தவர் .1967 ல் பிறந்தவர்  எழுத்தாளர்,கவிஞர்,சிந்தனையாளர்.

இவர் சிந்தனைகளின் சாரம் மனிதம் . மனிதம் செழிக்க ,நிலைக்க மிருக  நிலைக்கும் - தேவ நிலைக்கும் இடையில் இருக்கும் மனிதர்கள் சதா தேவநிலைக்கு உயர முயற்சித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

மனிதர்களை மிருக நிலைக்கு தள்ளிவிடும் காமம் பசி உயிர் பயம் ஆகியவற்றிலிருந்து மனிதகுலம் விடுபடவேண்டும்.  இதற்கு இன்றைய அரசுகள் முனைய வேண்டும். அரசுகள் முனைய  மக்கள் அழுத்தம் தர வேண்டும்.

இதற்கு மக்கள் அண்ணல் அம்பேத்கர் சொன்னதை போல் (கற்பி ஒன்றுசேர் புரட்சிசெய் ) செயல்பட வேண்டும் ஆனால்  இதற்கு அவர்கள்  முதலில் கற்றவர்களாக வேண்டும்.

அவர்கள் கற்கும் கல்வி தமது உடல் ,மனம்,புத்தி குடும்பம்,சமூகம்,மானிலம்,தேசம்,உலகம் பற்றிய விழிப்புணர்வை தருவதாய் இருக்க வேண்டும். அத்துடன் சொந்த கால்களில் நின்று குடும்பம் முதல் உலகம் ஈறாக பயன் பெறும்படி  வாழ உதவுவதாய் இருக்க வேண்டும்.

இவ்வாறான கல்வியைப் பெற்ற மக்கள் ஒன்று சேர்ந்து  புரட்சி கூட செய்யவேண்டியதில்லை தமக்குள்  கருத்துக்களை பரிமாறி.  பக்குவப்பட்டு  சரியான ஆட்சியாளர்களை தேர்வு செய்தாலே போதும்.  அவர்களை தொடர்ந்து கண்காணித்து தம் கருத்துக்களை உரக்க பதிவு செய்து வந்தாலே போதும்.

சுதந்திரம் -சகோதரத்துவம் -சமூக நீதி -பகுத்தறிவு -  இந்த  நான்கையும் அரசுகள் காத்து ஊக்குவித்து அமல்படுத்தி பரப்பி வரவேண்டும்.  பின்னடைவுகள்,  நடைமுறை சிக்கல்கள்  இருந்தாலும்  இவற்றை தூக்கிப் பிடிக்கும்   திராவிடம்  இவரது சாய்ஸ்.

மருத்துவம், விஞ்ஞானம், தகவல் தொழில்நுட்பம்  உச்சத்தில் இருக்கும் இந்த நாட்களில் இவை கடைக்கோடி குடிமகனுக்கும் சிந்தாமல் சிதறாமல் போய் சேர்ந்துவிட்டால் அதன்பிறகே ஆன்மீகம்  மூடநம்பிக்கைகளை கடந்து மனிதர்களை உண்மையிலேயே தேவநிலைக்கு உயர்த்தும்  என்பது இவர் பார்வை.

கல்வி  பிகாம் ..தமிழ்,தெலுங்கு,இந்தி ,ஆங்கிலத்தில் "பேர்"பண்ணக்கூடியவர். இவரது எழுத்துக்கள் 1987 -1990 கால கட்டத்திலேயே பாக்யா, கல்கி, கவிதாசரண், வாசுகி, நக்கீரனின் உதயம் ஆகிய இதழ்களில்பிரசுரம் கண்டு -கவனம் ஈர்த்தவை.

வீட்டை பாதிக்கும் ,சமூகம், சமூகத்தை பாதிக்கும் அரசியல்,அரசியலை பாதிக்கும் உலக அரசியல் ,உலகமயமாக்கம்  இவை அனைத்தையும் பாதிக்கும்/ பாதிக்கப்படும் மனவியல் -பாலியல் பின்னணிகளில் ,ஆராய்ச்சியில்  ஆர்வம் கொண்டவர்.

வெறுமனே விமர்சன புலியாக இருந்து விடாமல்  நாட்டின் , ந

Read More...

Achievements