You cannot edit this Postr after publishing. Are you sure you want to Publish?
Experience reading like never before
Sign in to continue reading.
"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Palராச ராசசோழன் மன்னர்களில் ஒரு மாமணி , அரசர் குலத்திலகம், வாராது வந்த வைரமுத்து,, வையத்தை விடிவிக்க வந்த வான் நிலவு என்றெல்லாம் சிலர் போற்றுகின்றனர் சிலருக்கு இவன் தமிழ்த்தேசியத்தின் சின்னம், தமிழர்களின் புகழ் பரப்பியவன்; பிற்கால சோழப்பேரரசை வலுவான அடிதளத்தில் அமைத்திட்ட ஆதவன் .
· ஆனால் நம்மைப் பொறுத்தவரை அவன் உலகில் தோன்றிய மன்னர்களில் ஒருவன். . மன்னன் என்றால் என்ன? மக்களைச் சுரண்டுபவன் மக்களை அதிகமாகச் சுரண்டுபவன் மாமன்னன்.. பேரரசன் என்றால் ,சக்கரவர்த்தி என்றால் மக்களைக் கடுமையாகச் சுரண்டியதுடன் நில்லாமல் அவர்களைக் கொடுமையாகத் துன்புறுத்தியவன் என்று பொருள்.. ஒன்று தன்னுடைய நாட்டு மக்கள் மீது தாங்க முடியாத வரிகளை விதித்து கொடுமைப்படுத்தி இருப்பான். இரண்டாவது அயல் நாடுகள் மீது படை எடுத்து அவர்களைக் கொன்று குவித்து, பெண்களை மான பங்கம் செய்து நாட்டைக் கொள்ளை அடித்திருப்பான். இதை எந்த மன்னன் சிறப்பாகவும் தொடர்ச்சியாகவும் செய்தானோ அவன் மன்னர்களின் மாமணி ! இதுதான் வரலாற்று உண்மை . அந்த மன்னன் தமிழன் என்ற காரணத்தால் இந்த உண்மை ,அடிப்படை மாறிவிடப் போவதில்லை. .ராச ராசசோழன், சந்திரகுப்தன் , மகா அலெக்ஸாண்டர், செங்க்கிஸ்கான் ஜார் மன்னன், கிருஸ்ண தேவராயன் இவர்களுக்குள் அடிப்பபடையில் எந்த வேறுபாடும் கிடையாது விழுக்காட்டு அளவில் கொடுமைகளின் அளவு வேறுபடலாம் . தமிழன் என்ற காரணத்திற்காக ராச ராசசோழனுக்கு 1000ஆம் விழா எடுத்து, ,ஆண்டு தோறும் அவனுக்கு சதய விழா எடுக்கும் போது நாம் இந்த் "சிறப்புகளுக்கும்" சேர்த்தே விழா எடுகிறோம் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
துரை.இளமுருகு
தமிழ் நாட்டின் மையமாக விளங்கும் சரித்திரப்புகழ் பெற்ற திரிச்சிராப்பள்ளி மாநகரில் வசிக்கும் இந்த நூலின் ஆசிரியர் தமிழ் நாட்டின் தொன்மையான வரலாறு குறித்த ஆய்வுகளில் மிகவும் ஈடுபாடும் ,விருப்பமும் கொண்டவர். உள்ளது உள்ளபடி சொல்லுவது; உண்மையை தேடிப்பிடித்தாவது சொல்லுவது இவை இர்ண்டும் இவருடைய எழுத்துப் பணியின் அடிப்படை நோக்கமாகும். . இதுவரை தமிழிலும் ஆங்கிலத்திலும் இருபதற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவரின் ",, சிந்து முதல் காவிரிவரை ( நோசன் பிரஸ்) சிறந்த முறையில் விற்பனையாகிக் கொண்டுள்ளது
The items in your Cart will be deleted, click ok to proceed.