You cannot edit this Postr after publishing. Are you sure you want to Publish?
Experience reading like never before
Sign in to continue reading.
Discover and read thousands of books from independent authors across India
Visit the bookstore"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Palஇந்நூல் சிறுமணவூர் முனிசாமி முதலியார் அவர்கள் எழுதிய திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி, திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி, நடராஜப் பத்து ஆகிய மூன்று நூல்களின் தொகுப்பு.
கும்மியடிப்பெண்கள் கும்மியடி - குரு
கும்பமுனியின் தமிழாலே
செம்மலெனுந்திரு வல்லாளமன்னவன்
சேதியைச்சொல்லிப் புவிமேலே. 1
வாரணமாமுகன் பொன்னடியை - முந்தி
வணங்கியிணங்கி யேதுதித்து
காரணமாக வல்லாளன்சரித்திரங்
கண்ணேகும்மி யடியுங்கடி. 2
சிறுமணவூர் முனிசாமி முதலியார்
பின்னிணைப்பு: போற்றித்திரு அகவல் மற்றும் நந்தமண்டல சதகம்
சிறுமணவூர் முனிசாமி முதலியார் அவர்களின் ஆக்கங்கள் 1888 தொடங்கி 1952 வரை கிடைக்கின்றன. 1888 முதல் 1939 வரை அவரால் ஆக்கப்பட்ட அச்சு வடிவங்கள் கிடைக்கின்றன. அக்காலத்திலும் பின்னரும் அவரது ஆக்கங்களின் மறு அச்சுகள் கிடைக்கின்றன. ஒவ்வொரு ஆக்கமும் ஒவ்வொரு ஆண்டும் மறு அச்சு தொடர்ச்சியாக செய்யப்பட்டிருப்பதை ரோஜா முத்தையா நூலகப்பட்டியல் மூலம் அறிய முடிகிறது. முனிசாமி அவர்களின் ஆக்கங்கள் குறித்துப் பிற நூலகப்பட்டியல்களிலும் விவரங்கள் காணப்படுகின்றன. பிரித்தானிய அருங்காட்சியக நூலகப்பட்டியல்கள் மூன்றிலும் சேர்த்துப் பதினாறு பதிவுகள் உள்ளன. தமிழ்நூல் விவர அட்டவணையில் (தொகுதி I-IV மற்றும் தொகுதி II) பத்துப் பதிவுகள் உள்ளன.
The items in your Cart will be deleted, click ok to proceed.