You cannot edit this Postr after publishing. Are you sure you want to Publish?
Experience reading like never before
Sign in to continue reading.
Discover and read thousands of books from independent authors across India
Visit the bookstore"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Pal+அவள் ஒரு எக்ஶ்ட்றா
சாதனை வீரர்
"வே, உமக்கு கவனிப்பும் நிலையான பேரும் வரணும்னு சொன்னா, அதுக்காக நீரு அபாசமான காரியங்களை செய்தாகனும்கிற அவசியம் எதுவும் கிடையாது. அசட்டுத்தனமான, முட்டாள்தனமான, கோணல் தனமான காரியங்களை செய்தும் நீரு பேரு பெற முடியும்."
இப்படி ஓங்கி அடித்தார் சூரியன் பிள்ளை அண்ணாச்சி. அவரது முழுப்பெயர் சூரிய நாராயணபிள்ளை. வழக்கத்திலே அது சூரியப்பிள்ளை என்று குறுகிப் போச்சு, "என்ன அண்ணாச்சி இப்படிச் சொல்லுதிக?" என்று அதிசயித்தார், கூட இருந்த ஒரு தம்பியா பிள்ளை
"இல்லாததையா சொல்லுதேன். இந்திய சரித்திரம் முகமது பின் துக்ளக் செயல்களையும் பதிவு செய்து வச்சிருக்காக இல்லையா? அவன் ஏறுமாறான காரியங் களைத்தானே செய்துக்கிட்டிருந்தான்?" என்று கேட்டார் சூரியன் பிள்ளை,
பிறகு அவரே தொடர்ந்தார். "அவ்வளவு தூரம் போவானேன்! நம்ம தாமிரவர்ணி ஆத்திலே கொக்கிர குளம் பாலத்துக்கு கிழக்கே ஒரு ஓடை ஓடிக்கிட்டிருக்கு. புள்ளெயைப் போட்டு பலாப்பழம் எடுத்த ஒடையின்னு அதுக்குப் பேரு. அதுக்கு ஏன் அந்த பேரு வந்தது?" தம்பிமார்களுக்குத் தெரியவில்லை "நீங்களே சொல்லுங்க அண்ணாச்சி", என்றார்கள்.
"ரொம்ப காலத்துக்கு முந்தி அது நடந்து எத்தனையோ தலைமுறை ஆகுது. எவளோ ஒரு பொம்பிளை செய்த அசட்டுத்தனமான வேலையை நித்தியமா, நிரந்தரமா அது நினைவுபடுத்திக்கிட்டே இருக்கு!"-
"அது என்ன விசயம், அண்ணாச்சி?"
“ஒரு பொம்பிளை, ஒக்கல்லே புள்ளையை வச்சுக்கிட்டு அந்தப் பக்கமா வந்திருக்கா. ஒடையிலே ஒரு பலாப்பழம் உருண்டு புரண்டு வாறதை அவ பார்த்தா, பார்த்தானா? அவளுக்கு பலாப்பழத்து மேலே ஆசை உண்டாயிட்டுது. அதை புடிச்சி எடுத்துரலாம்னு தோணிச்சு.
வல்லிக்கண்ணன்
வல்லிக்கண்ணன் (ரா.சு. கிருஷ்ணசாமி, நவம்பர் 12, 1920 - நவம்பர் 9, 2006) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். இவரது தந்தை ரா.மு. சுப்பிரமணிய பிள்ளை, தாய் மகமாயி அம்மாள். 1930களிலும், 40களின் துவக்க ஆண்டுகளிலில் லோகசக்தி, பாரதசக்தி போன்ற பத்திரிகைகளில் வல்லிக்கண்ணன் கதைகளும், உணர்ச்சிகரமான கட்டுரைகளும் பாடல்கள் என ரா. சு. கிருஷ்ணஸ்வாமி என்றும், ராசுகி என்ற பெயர்களில் எழுதத்துவங்கினார். அந்தச் சமயத்தில் தனக்கு ஒரு புனைபெயர் தேவை என எண்ணினார். இதையடுத்து அவரது சொந்த ஊரான ராஜவல்லிபுரத்தில் உள்ள வல்லியையும் கிருஷ்ணஸ்வாமி என்ற தன்பெயரை கண்ணன் என மாற்றி இரண்டையும் இணைத்து, வல்லிக்கண்ணன் என்ற பெயரில் எழுதத்தொடங்கியவர்.[1] எழுத்தாளராக வேண்டும் என்பதற்காகவே அரசுப் பணியிலிருந்து விலகியவர். அரசுப் பணியிலிருந்து விலகிய பின்னர் தொடக்கத்தில் இதழ்களில் ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளார். பின்னர் சிறுகதை, நாவல், குறுநாவல், கட்டுரை என ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். இவருடைய சிறுகதைகளில் சில ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. இவருடைய பெரிய மனுஷி எனும் சிறுகதை அனைத்து இந்திய மொழிகளிலும் நேரு பால புத்தக வரிசையிலும் வெளிவந்துள்ளது. இவர் எழுதிய "வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2002 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சிறுகதை எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
The items in your Cart will be deleted, click ok to proceed.