You cannot edit this Postr after publishing. Are you sure you want to Publish?
Experience reading like never before
Sign in to continue reading.
"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Palராதா அவர்களின் "வைகறையின் பூபாளம்" என்னும் கவிதைத் தொகுப்பில் இயற்கையை இனிமையான தமிழில் வர்ணித்து, ஆகாயத்தை, மேகக் கூட்டங்களை, மழையை கம்பிச் சரங்ககளாக வர்ணித்த கற்பனைத் திறன். இயற்கையை ஓவியனாக மெருகூட்டிய கவிதை என சிறந்த கவிநயம் வெளிப்படுகிறது. அறிவுரை வழங்கியதிலும், மரம் வளர்ப்பதன் மகிமையையும் மற்றும் தமிழ் மொழியின் பெருமையையும் பறைசாற்றும் கவிதைகளும் இடம்பெற்றுள்ளது பயனளிக்க வல்லது.
ராதா
இயற்கை எழில் கொஞ்சும் கரியாபட்டிணம் என்னும் ஒரு சிறு கிராமத்தில் 16 மே 1956 ல் பிறந்த ராதா சிறு வயது முதல் இயற்கையாகவே கவி புனையும் ஆற்றல் பெற்றவர். இயற்கை கவிதைகள் தொடங்கி இறை கவிதைகள் மற்றும் சிறுகதைகள் பலவும் தினமணி கதிர் மற்றும் சிறு பதிப்புகளில் வெளிவந்துள்ளன. தலைநகர் தில்லியில் வசித்த காலத்தில் தில்லி தமிழ்ச் சங்கத்தில் "சிறுத்தையே வெளியில் வா" என்ற பாரதிதாசனின் வரிகள் வைத்துப் புனையப்பட்ட கவிதைக்கு முதல் பரிசும், "கண் வழிந்தாள் காவிரி", "ஊமை நெஞ்சின் ஓசைகள்" முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசுகளையும் பெற்றுத் தந்தன. சிறு கதைகள் எழுதுவதிலும் ஆர்வமும் ஆற்றலும் கொண்ட இவருடைய பல படைப்புகள் வெளிவராமல் தேங்கிக் கிடக்கின்றன.
The items in your Cart will be deleted, click ok to proceed.