Share this book with your friends

YELIYALISAMUM MUGANOOL MUKTHIYUM / எளியலிசமும் முகநூல் முக்தியும்

Author Name: TAMIZHDESAN IMAYAKAPPIYAN | Format: Paperback | Genre : Philosophy | Other Details

பொருட்களை விட்டுவிட்டு உங்களுக்கும் உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கும் முக்கியத்துவம் கொடுப்பது மினிமலிசம்.கூகுள் அதனை "உச்ச நிலை எளிமை" என்று மொழிபெயர்க்கிறது. அது என்ன உச்ச நிலை எளிமை?நன்றாக சம்பாதித்துவிட்டு சம்பாதிக்காதே என்று தத்துவம் பேசுவதா? பொருட்களை உபயோகித்துவிட்டு, அதனை உபயோகிக்காதே என்று அறிவுரை சொல்வதா?நீ உபயோகித்துவிட்டு சொல்கின்ற அறிவுரை நாங்கள் கேட்கத் தேவையில்லை. நாங்களும் அனுபவித்துவிட்டு தத்துவம் சொல்கிறோம் என்கிற எதிர்வினைகளும் வரும்.ஆனால் அனுபவித்து வருகின்ற அந்த அறிவுரைகள் , கடந்து வந்த கசப்புகளின் நிஜம்.அலட்சியப்படுத்தலாம் இல்லை அவசியப்படுத்தலாம்.அதிகமான பொருட்கள் = அதிகமான கவலைகள்.குறைவான பொருட்கள் = குறைவான கவலைகள்நான் சவுதியை விட்டு செல்வதற்காக, எல்லாவற்றையும் முடித்துவிட்டு கிளம்பியபோது, ஒரு ஒரு பெட்டி மட்டும்தான் எனக்காக இருந்தது அந்த 6 வருட சவுதி வாழ்க்கையில்.எனக்கு பொருட்களை அனுப்புவதற்கான செலவுகளும் மிச்சம். எப்படி அனுப்பப் போகிறோம் என்கிற கவலைகளும் மிச்சம்.குறைவான உடைகள் , கட்டில், டேபிள் , லேப்டாப், கொஞ்சம் புத்தகங்கள் அவ்வளவுதான்பொருட்களின் சேகரிப்பு அந்த 6 வருடத்தில். இதுபோல பல வருடங்களாக இருக்கின்றார்கள் வெளிநாட்டில்.வேலை முடித்து வந்தால் கட்டில்தான் வீடு. அவர்கள் உலா வருவது கிச்சனில் - படுக்கையறையில் அவ்வளவுதான். பல அவர்களுக்கு தேவையான வாழ்க்கை முறை அவ்வளவுதான்.அந்த குறைவான பொருட்களோடு தனது வாழ்க்கையின் 6 தசாப்தத்தில் , 3 தசாப்த ஆண்டுகளை அந்த குறைவான வாழ்க்கை முறையில் கழிக்கின்றார்கள். அதுவே அவர்களுக்கு போதுமானது.வேலைக்குச் சென்ற இடத்திலேயே இப்படி வாழ்ந்து கொண்டிருக்கும் போது, வாழ்ந்து கொண்டிருக்கும் நாட்டில் இப்படி முடியாதா என்ன?

Read More...
Paperback
Paperback 1050

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

TAMIZHDESAN IMAYAKAPPIYAN

உயிரைக் காக்க ஓடாத நாள் வேண்டும்
83 - இனப்படுகொலைக்கு முன் அறவழிப் போராட்டமும், ஆயுதப் போராட்டமும் கலந்திருந்த காலத்திலேயே தலைமறைவு வாழ்க்கைக்கு தயார் என ஒவ்வொருவரும் தனக்குத் தானே கட்டளை இட்டுக் கொண்டனர் உலகின் விடுதலைக்காக போராடும் இயக்கங்களுக்கெல்லாம் மிகச் சிறந்த காத்திரமான கட்டுப்பாட்டுடனும், ஒழுக்கத்துடனான வாழ்வுப் போருக்கும் முன்னுதாரணமாக திகழும் எல்டிடிஇ வருகை, வளர்ச்சி  இல் மக்களோடு இரண்டறக் கலந்து மக்கள்தான் எல்டிடிஇ எல்டிடிஇ தான் மக்கள் என்கிற விடுதலைப் போராட்டத்திற்கு பெருவாரியான மக்கள் *மண்ணுக்காக மரணிப்போம் என கிளர்ந்தெழுந்தார்கள்

எல்லாவற்றையும் இழந்துவிட்ட நானும் எனது வது அகவையில் நண்பர்களுடன் சேர்ந்து சாவதற்கு சத்தியம் செய்தேன் பாலர் வகுப்பு முதல் பல்கலைக்கழகம் வரை என்னோடு நெருங்கிய நண்பர்கள் யாரும் உயிரோடு இல்லை இராணுவ மொழியில் சொல்வதென்றால் அவர்கள் காணாமல் போனார்கள் கடந்த  ஆண்டுகளாக இடப்பெயர்வான சுற்றோடி வாழ்வும் - புலம் பெயர்ந்த வாழ்வும் என் பின்னால் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன வாழ்வின் நீள் பாதையில் எல்லாவற்றுக்கும் முகம் கொடுத்து வாழப் பழகிக் கொண்டேன்

மறைந்து வாழவும், இழந்து வாழவும், இறந்து வாழவும், பழகிக் கொண்ட நான், இந்த இகழ் வாழ்வில் இன்று பதுங்கி வாழவோ, நிமிர்ந்து வாழவோ பலமும் இல்லை பயமமுமில்லை என்ற நிலையில் உள்ளேன் உடலும் உள்ளமும் தளர்ந்து போனாலும் ஏதோ ஒரு நம்பிக்கையில் வாழவும் தமிழ் சமூகத்துக்கு ஒன்றைச் செய்ய முடியும் என்ற விருப்பவியல் குருதித் தொனியில் தோணியில் வந்த காலம் கரைகிறது

 முதல் இன்று வரை ஓடித்திரியும் வாழ்வில் பல கவிதைகளும் கட்டுரைகளும் காணாமல் போனது இதழ்களை தேடுவதும் சாத்தியமில்லை இதழ் நடத்தியவர்களும் சேகரிப்பாளர்களும் உயிரோடு இருந்தால்தானே தேடுவதற்கு வாழ்வதற்கே போராடும் மனிதர்களிடத்தில் எதைத் தேடி அலைவது நான் சேகரித்த நூலகமும் எழுதியவைகளும் காலப்போக்கில் அனலிலும் புனலிலும் கரைந்தது ஒரு பக்கம் என்றால், பேரினவாத அரசால் பத்திரிகை சுதந்திரமும் எழுத்தாளர்களும் தடை செய்யப்படுவதும், கொல்லப்படுவதும், நூல்கள் எரியூட்டப்படுவதும் இன்று வரை தொடர்ந்த வண்ணம் இருக்கையில், நானும் என் கவிதைகளும் தப்புவது எம்மாத்திரம்?நானும் எல்லாவற்றுக்கும் ஆளானேன் எல்லாவற்றையும் ஞாபகப்படுத்தி எழுதி விடலாம் என்ற நம்பிக்கை மட்டும் இன்னும் முகிலாய் இருக்கிறது

Read More...

Achievements

+15 more
View All