You cannot edit this Postr after publishing. Are you sure you want to Publish?
Experience reading like never before
Sign in to continue reading.
Discover and read thousands of books from independent authors across India
Visit the bookstore"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Palமனதின் சமநிலையை பாதித்த தனிப்பட்ட, குடும்பம் சார்ந்த, சமுதாயம் சார்ந்த நிகழ்வுகளை, தனிமையில் யோசிக்கும்போது உருவாகிய எண்ணங்களை எழுத்துக்களாக்கி வைத்திருந்தேன். கடந்தகால நிகழ்வுகளை அசைபோட, அச்சில் ஏற்றி புத்தகமாய் மாற்ற தற்போதைய தொழில்நுட்பம் உதவுகிறது.
ஒரு காலத்தில் புத்தகம் வெளியிடுவது என்பது சாதரணமாக நினைத்துப்பார்க்க கூடிய விடயமல்ல. இன்று அது நிஜமாகிரது. அறிவியல் தொழிலநுட்பம் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.
நாம் அனைவரும் அடிப்படையில் ஏறக்குறைய ஒரே மாதிரியான உணர்வுகளைக் கொண்டவர்கள்தான். அதை வெளிப்பத்தும் விதம்தான் வெவ்வேறாக இருக்கிறது. எந்து எழுத்துக்களில் உங்கள் எண்ணண்ங்களும் உணர்வுகளும் கலந்திருந்தால் ஒருமுறை புன்னகைத்துவிட்டு படிப்பதை தொடருங்கள். வணக்கம்.
சூரியகாந்தி சதீஸ்குமர்
ஆசிரியர் அறிமுகம்.
தேடித் தெளியும் ஆர்வத்துடன் ஆசிரியராகப் பணிப்புரிந்துக் கொண்டிருக்கும் நான், வாழ்க்கை எனற பள்ளியில் ஒரு மாணவன், பணிபுரிதலை நோக்கமாகக் கொண்டு கற்றப் பட்டப்படிப்புகளை பட்டியலிடுவதில் பயனொன்றும் இல்லையென்று எண்ணுகிறேன். என்னைப் பற்றிய மற்றவர்களின் பார்வையை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
“ சதீஷ்குமார்.இ.எச். ஒரு ஆர்வமுள்ள தலைவர் மற்றும் கல்வியாளர். அவர் தனது சமூக அங்கீகாரத்திற்கு பல பட்டங்களை வைத்திருக்கிறார். அவர் ஒரு ஆவலுள்ள வாசகர், ஒழுக்கமானவர், மேலும் ஆன்மீக மற்றும் தத்துவார்த்தமான சிந்தனையோட்டம் கொண்டவர்.
தனது எழுத்துக்கள் புத்தகமாக வரவேண்டும் என்பது அவரது பள்ளிக் காலக் கனவுகள். அது தன்னைப் போல தேடுதல் உள்ளப் பலருக்கு ஒளிதரும் ஒரு சிறு விளக்காக இருக்கும் என்று நினைத்தார். அவர் மகாத்மா காந்தி மற்றும் அவரது கொள்கைகளில் பற்றுக்கொண்டவர்.
அவர் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்காக ஏராளமான பயிற்சிப் பட்டறைகள் மற்றும் ஊக்க உரைகளை நடத்தியுள்ளார். அவர் தன்னைச் சுற்றியுள்ள மக்களிடையே நெறிமுறை விழுமியங்களை ஊக்குவிக்கப் பணியாற்றுகிறார். மேலும் தம்பதியர் மற்றும் மாணவர்களுக்கு அவர்களது பிரச்சினைகளிருந்து விடுபட ஆலோசனைகளை வழங்கி வழிகாட்டுகிறார்.
அவர் நீலகிரியின் மாவட்டத்தில் உள்ள இளித்துறை என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். அவர் தனது தெளிவிற்கும் கல்விக்கும் காரணம் தனது தாய்தான் என்று சொல்லித் தனது தாய் மிட்சியை கொண்டாடுகிறார்.
இவர் தனது மனைவி மற்றும் மகளுடன் கோவையில் வசித்து வருகிறார்.
130க்கும் மேற்பட்ட கவிதைகள் மற்றும் 10 கதைகளை எழுதியுள்ளார்.
திரு சதிஷ் குமார் ஐயாவைப் பார்க்கும் போதே நம் உள்ளுணர்வு கூறும் இவர் மனிதநேயமும் அன்பும் மிக்கவர் என்று .எந்தவொரு இக்கட்டான சூழலிலும் அகமும் புறமும் அன்பானவர். உதவி என்று கேட்பின் உதாசீனப்படுத்தாது நண்பன் போலச் செய்பவர். இவரின் மென்மையான பேச்சும் சாந்தமுகமும் பதட்டத்தைத் தவிர்க்கச் செய்யும். எந்நிலையிலும் இயல்பாக இருப்பவர். அற்புதமான மனிதர்.
மாணவர்களின் திறனை மென்மேலும் வளர்க்கும் உயர்ந்த ஆசிரியர் . கற்றலிலு புதுமையை அறிந்து கொள்வதிலும் மாணவர் போன்றவர். ஐயாவின் உயர்குணங்களைக் கண்டு வியந்த தருணங்கள் பல. அவரின் குணங்கள் மாணாக்கரை வியக்கச்
கீழேயுள்ள இணைப்புகளைப் பார்வையிடுவதன் மூலம் அவரைப் பற்றி மேலும் அறியலாம்.
sathishkumar.psgps@gmail.com
The items in your Cart will be deleted, click ok to proceed.