Share this book with your friends

KADHALUM KALYANAMUM (Novel) / காதலும் கல்யாணமும் நாவல்

Author Name: Vindhan | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

“எங்கேப் போகிறாய்?'-அதட்டினார் ஆபத்சகாயம். அவள் அஞ்சவில்லை; ‘'நான் எங்கே போகிறேன்?” என்றாள், அவரை நோக்கித் திரும்பாமலே.

“எங்கேயும் போகாததற்கு அப்படித் திரும்பிக் கொண்டிருப்பானேன்?”

‘'வெட்கப்படுகிறேன், உங்களைப் பார்க்க! வேதனைப்படுகிறேன், அதை உங்களிடம் சொல்ல!”

‘இருக்காதா, சொல்லாமல் கொள்ளாமல் ஓடிவந்தால் ‘

‘அதற்காக நான் வெட்கப்படவில்லை...’

‘வேறு எதற்காக வெட்கப்படுகிறாயாம்?”

‘இப்படியும் ஒர் அப்பா வந்து வாய்த்திருக்கிறாரே என்பதற்காக’

இதைச் சொல்லி அவள் வாய் மூடவில்லை; “என்னச் சொன்னாய்’ என்று உறுமினார் அவர்.

மோகன் குறுக்கிட்டு, ‘அவளுடன் உங்களுக்கு என்னப்பா, பேச்சு? நீங்கள் போய்க் காபியைக் குடியுங்கள்!” என்றான். அவரைச் சமாதானம் செய்யும் நோக்கத்துடன்.

அவரோ, ‘இவளை இப்படியே விட்டுக்கொண்டு போகக் கூடாது, மோகன் நேற்றுத்தான் அந்தப் பெரிய மனிதரிடம் இவள் மரியாதை தெரியாமல் நடந்துகொண்டாள் என்றால், இன்று என்னிடமுமல்லவா மரியாதை தெரியாமல் நடந்து கொள்கிறாள்?’ என்றார் அப்பொழுதும் விடாமல்.

அவளும் விட்டுக் கொடுக்கவில்லை; ‘முதலில் மரியாதை என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளுங்கள்; அதற்குப் பிறகு மரியாதையைப் பற்றிப் பேசுங்கள்’ என்றாள் சுடச் சுட.

அவ்வளவுதான்; அவள் கன்னத்தில் ‘பளார்’ என்று ஒர் அறை விழுந்தது. அதைத் தொடர்ந்து, “அவ்வளவு தூரத்துக்கு வந்துவிட்டாயா, நீ? ஜாக்கிரதை யாரிடம் என்ன பேசுகிறோம் என்று தெரிந்து பேசு; தெரியாமல் பேசாதே! பேசினால் இந்த வீட்டில் எனக்கு நீ மகளாகவும் இருக்க முடியாது; உனக்கு நான் அப்பாவாகவும் இருக்க முடியாது’ என்று ஒரு துள்ளுத் துள்ளி நின்றார் அவர்.

Read More...
Paperback
Paperback 350

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

விந்தன்

கோவிந்தன் காஞ்சிபுரம் மாவட்டம் நாவலூரில் வேதாசலம், ஜானகி ஆகியோருக்குப் பிறந்தார். சென்னை சூளைப் பகுதியில் கோவிந்தன் ஆரம்பக் கல்வி கற்றார். சிறு வயதிலேயே தந்தையோடு கருமான் (ஆசாரி) வேலை செய்து வந்தார். இரவுப் பள்ளியில் சேர்ந்து மீண்டும் கல்வியைத் தொடர்ந்தார். தொடர்ந்து படிக்க இயலவில்லை. ஓவியக் கல்லூரியில் சேர்ந்து சில ஆண்டுகள் ஓவியம் பயின்றார். அதையும் தொடர முடியவில்லை. ஜெமினி பட நிறுவனத்தில் பணியாற்றினார்.

1938ஆம் ஆண்டு லீலாவதி எனும் பெண்மணியை மணந்தார். இரண்டு குழந்தைகளை விட்டுவிட்டு அந்த அம்மையார் இறந்துபோக, பின் சரஸ்வதி என்ற பெண்ணை இரண்டாம் தாரமாக மணந்தார். ஆறு குழந்தைகள் பிறந்தன.

மாசிலாமணி முதலியார் நடத்திய "தமிழரசு" மாத இதழில் அச்சுக் கோப்பவராகச் சேர்ந்தார். தமிழரசுக்குப் பிறகு ஆனந்த விகடன் அச்சுக் கூடத்தில் வேலை கிடைத்தது. கையெழுத்துப் பிரதிகளிலிருந்து அச்சுக்கோக்கும் வாய்ப்பு ஏற்பட்டதால் தமிழ் இலக்கிய அறிவை வளர்த்துக் கொண்டார். தாமும் எழுத வேண்டும் என்ற அவா அவருக்கு ஏற்பட்டது.

கல்கி கிருஷ்ணமூர்த்தியால் 1941ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கல்கி இதழ், விந்தன் வாழ்க்கையில் புதுத் திருப்பத்தை ஏற்படுத்தியது. ஆனந்த விகடனில் இருந்து வெளியேறிய டி.எம்.இராஜா பாதர் என்ற அவரது நண்பர் விந்தனுக்கு கல்கி வார இதழில் அச்சுக் கோக்கும் பணியில் சேர உதவினார். கோவிந்தனுடைய அச்சுக் கோக்கும் திறமையைப் பாராட்டியதோடு, அவர் கதைகளும் எழுதுவார் என்பதை அறிந்து, "கல்கி" இதழில் தொடர்ந்து எழுதுமாறு கூறினார். சில மாதங்களில் துணை ஆசிரியராகவும் நியமித்தார். கல்கியின் துணை ஆசிரியராகச் சேர்ந்த விந்தன், குழந்தைகளுக்கு (பாப்பா மலர் பகுதியில்) "விஜி" என்ற பெயரில் பல கதைகள் எழுதினார். விஜி என்ற பெயரை "விந்தன்" என்று பெயர் மாற்றிக் கொள்ளச் சொன்னவர் "கல்கி" கிருஷ்ணமூர்த்தி தான்.

Read More...

Achievements

+15 more
View All