Share this book with your friends

KAZHANI VAASAM ( TAMIL FOLK STORIES) / கழனி வாசம் நாட்டுப்புற கதைகள்

Author Name: Kaappiya Vaasipagam | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

பையன் வயசுக்கு வந்துட்டான்
அந்தப் பெண் பிள்ளை வயசுக்கு வந்துட்டாள்” என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறோம். “பையன் வயசுக்கு வந்துட்டான்” என்று அறிவிப்பதற்கும் ஒரு சடங்கு இருக்கிறதா. . .?
ஆம். செட்டி நாட்டில் “பையன் வயசுக்கு வந்துட்டான்” என்பதை அறிவிக்கவும் ஒரு சடங்கை நடத்துகிறார்கள். அதற்குச் “சூப்பிடி” என்று பெயர் என்ற தகவலைச் சொன்னார் காரைக்குடியைச் சேர்ந்த கண்ணதாசன் இலக்கியப் பேரவையின் அமைப்பாளரான அரு.நாகப்பன் அவர்கள். பெண் ‘வயசுக்கு வந்துட்டாள்’ என்பதைக் குறிக்க பல்வேறு வழக்குத்தொடர்களை கிராமத்து மக்கள் பயன்படுத்துகிறார்கள். சடங்காயிட்டா, குத்த வச்சிட்டா, பூப்படைஞ்சிட்டா, என்பவை அவற்றில் சிலவாகும். பிறப்பு முதல் இறப்பு வரை தமிழகத்தில் வட்டாரம் வாரியாக, இனக்குழுவாரியாக, ஜாதிவாரியாக, (மலைவாழ் மற்றும் நாடோடி மக்கள் உள்பட) நிலவிய, இன்றும் நிலவுகிற வாழ்க்கை வட்டச் சடங்குகள் அனைத்தையும் சேகரித்தால் நாட்டார் துறைக்கு அத்தரவுகளே பெரும் பொக்கிஷமாகத் திகழும். வாழ்க்கை வட்டச் சடங்குகளுக்குப் பின்னால், மனித மனங்களின் உளவியலும், பண்பாட்டு அம்சங்களும் புதைந்து காணப்படுகின்றன.

Read More...
Paperback
Paperback 750

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

காப்பியா வாசிப்பகம்

85 முதல் இன்று வரை ஓடித்திரியும் வாழ்வில் பல கவிதைகளும் கட்டுரைகளும் காணாமல் போனது. இதழ்களை தேடுவதும் சாத்தியமில்லை. இதழ் நடத்தியவர்களும் சேகரிப்பாளர்களும் உயிரோடு இருந்தால்தானே தேடுவதற்கு. வாழ்வதற்கே போராடும் மனிதர்களிடத்தில் எதைத் தேடி அலைவது. நான் சேகரித்த நூலகமும் எழுதியவைகளும் காலப்போக்கில் அனலிலும் புனலிலும் கரைந்தது ஒரு பக்கம் என்றால், பேரினவாத அரசால் பத்திரிகை சுதந்திரமும் எழுத்தாளர்களும் தடை செய்யப்படுவதும், கொல்லப்படுவதும், நூல்கள் எரியூட்டப்படுவதும் இன்று வரை தொடர்ந்த வண்ணம் இருக்கையில், நானும் என் கவிதைகளும் தப்புவது எம்மாத்திரம்?நானும் எல்லாவற்றுக்கும் ஆளானேன். எல்லாவற்றையும் ஞாபகப்படுத்தி எழுதி விடலாம் என்ற நம்பிக்கை மட்டும் இன்னும் முகிலாய் இருக்கிறதுதமிழக மக்களுக்கு ஈழப் போர் குறித்த வாழ்வையும் பேரினவாத அரசால் நாளாந்தம் மக்கள் படும் பேரவலத்தையும் ஒரு நூறு கவிதைகளாகவும் கதைகளாகவும் சொல்லியிருக்கிறேன். புலம்பெயர் வாழ்வில் தமிழகப் பார்வையை உரை நடையாகவும், காதல் கவிதைகளாகவும், நாட்டுப்புறவியல் களச் சேகரிப்புகளாகவும், பத்திகளாகவும், இலக்கண இலக்கிய அகராதிக் காப்பியமாகவும், நாடகக்கலையாகவும், நுண்கலைப் பிரதிகளாகவும், நாடோடிப் பயணங்களாகவும், கலா சாலை போதகனாகவும், முற்போக்கில்லா கற்போக்கு விருந்தாளனாகவும், தொகுப்பதிகாரமாகவும் பதிவு செய்திருக்கிறேன். மேலும் ஆங்கிலத்தில் மூத்தகுடி கலாச்சாரப் பயணங்கள் மற்றும் கல்விப் புலக்கலைப் பேரதிகார நுட்பவியல் குறித்தும் மனைவி தமிழ் இனியா சொற்களை விதைத்து வருகிறார். புகார்க் காண்டத்திலிருந்து மதுரைக் காண்டம் வந்துள்ள கொடை மகன் இமயக்காப்பியன்(6) படைப்பாக்கப் பணியில் முந்நீர் போல் எமக்கு பேருதவியாக இருக்கிறான். துயரங்களின் சாட்சிகள் மரணிப்பதில்லை என்கிற காத்திரச் சொல்லின் சாட்சிகளாய் நாங்கள். கீழடி / உலகின் / மூத்த காலடி

எனக்கான உதவிகளை செய்யும் குழந்தைகள் சக்தி என்கிற விடுதலைவெண்பா, சூரியவாசன் என்கிற இலக்கியப்புரட்சியாளன், ரித்திஷா என்கிற நிழலினி, விதுஷி, பார்பி என்கிற மோனலிக்கும், பாரா முகமாகவே போய்விட்ட ஜேர்மனியில் வாழும் குழந்தைகளான பூர்த்திகா என்கிற இதழினி, அரிகரசுதன் என்கிற எளிஞன் ஆகியோருக்கும் நன்றி சொல்ல தேவையில்லை. எக்காலத்திலும் நன்றிக்குரியவர்களாக இருக்கும் என் சின்னத்தாய் செல்வி கிருஷ்ணமூர்த்தி குடும்பத்தாருக்கும் மற்றும் எனது அக்கா பத்மாவதி, தீபாவிற்கும் நன்றிகள் பல.

-தமிழ்த்தேசன் இமயக்காப்பியன்

Read More...

Achievements

+15 more
View All