Share this book with your friends

MANITHAN MARAVILLAI (story) / மனிதன் மாறவில்லை கதை

Author Name: Vindhan | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

‘இலக்கியம் கற்பனையிலிருந்து பிறக்க வில்லை; வாழ்க்கையிலிருந்து தான் பிறக்கிறது!’ என்று நான் நினைக்கிறேன். அவ்வாறு பிறக்கும் இலக்கியம் எப்படி இருக்கும்?. “இந்தப் பத்திரிகையில் வெளியாகும் கதை, கட்டுரைகளில் காணப்படும் பெயர்கள், சம்பவங்கள் யாவும் கற்பனை, யாரையும் குறிப்பிடுபவனல்ல’ என்று பத்திராதி பதிகள் தற்காப்பு"க்காகத் தங்கள் பத்திரிகையின் முதல் பக்கத்திலேயே போட்டுக் கொண்டாலும், யாரையாவது எதையாவது குறிப்பிடு வனவாய்த்தான் இருக்கும்... அதற்கு நானா பொறுப்பு?

ஒன்று வேண்டுமானால் செய்யுங்கள் - போலீஸ் காரன் திருடமாட்டான், இன்ஸ்பெக்டர் எந்த ஆதாயத்தை முன்னிட் டும் அதை மறைக்க மாட்டார், வக்கீல் பொய் சொல்ல மாட்டார், நீதிபதி அந்தப் பொய்யை ஏற்று நிரபராதியைத் தண்டிக்க மாட்டார். தமிழ்ப் பேராசிரியர் தமிழ்ப் பேராசிரியையைக் காதலிக்க மாட்டார். அப்படியே காதலித்தாலும் அவளைத் தவிர வேறொருத்தியைக் கண்ணெடுத்தும் பார்க்க மாட்டார் என்பனவற்றை யெல்லாம் நீங்கள் நம்புவதாயிருந்தால் இந்தக் கதையைப் படிக்க வேண்டாம்; தயவு செய்து படிக்க வேண்டாம்!

-விந்தன்​​​​​​​

Read More...
Paperback
Paperback 250

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

விந்தன்

கோவிந்தன் காஞ்சிபுரம் மாவட்டம் நாவலூரில் வேதாசலம், ஜானகி ஆகியோருக்குப் பிறந்தார். சென்னை சூளைப் பகுதியில் கோவிந்தன் ஆரம்பக் கல்வி கற்றார். சிறு வயதிலேயே தந்தையோடு கருமான் (ஆசாரி) வேலை செய்து வந்தார்.

இரவுப் பள்ளியில் சேர்ந்து மீண்டும் கல்வியைத் தொடர்ந்தார். தொடர்ந்து படிக்க இயலவில்லை. ஓவியக் கல்லூரியில் சேர்ந்து சில ஆண்டுகள் ஓவியம் பயின்றார். அதையும் தொடர முடியவில்லை. ஜெமினி பட நிறுவனத்தில் பணியாற்றினார்.

1938ஆம் ஆண்டு லீலாவதி எனும் பெண்மணியை மணந்தார். இரண்டு குழந்தைகளை விட்டுவிட்டு அந்த அம்மையார் இறந்துபோக, பின் சரஸ்வதி என்ற பெண்ணை இரண்டாம் தாரமாக மணந்தார். ஆறு குழந்தைகள் பிறந்தன.

Read More...

Achievements

+15 more
View All