Share this book with your friends

PRISON (Essays) / ஜெயில் கட்டுரைகள்

Author Name: P. Ramaswamy | Format: Paperback | Genre : True Stories | Other Details

நண்பர்களுக்கு
இந்தப் புத்தகத்திலுள்ள ஐந்து கட்டுரைகளும் வெவ்வேறு காலத்தில் எழுதப்பட்டவை. எனினும், இவை களுக்குள் நெருங்கிய தொடர்பு உண்டு.
இதில் கூறப்பட்டிருக்கும் கருத்துக்களில் சில மிகவும் புரட்சிகரமானவை என்று யாரும் அஞ்ச வேண்டிய தில்லை. ஏனெனில், இவைகளைப் பார்க்கிலும் புரட்சிகர மான கருத்துக்களை உடையவர்கள் பலர் இருக்கின்றனர்.
புரட்சி என்பதுதான் என்ன? வளர்ச்சி ஆமை வேகத் தில் ஊர ஆரம்பித்தால், உடனே புரட்சி தோன்றாமல் முடியாது. புரட்சி என்பது ஐதி, வளர்ச்சி என்பது நடனம். புரட்சிகள் ஆகிய பல ஜதிகள் சேர்ந்து வளர்ச்சி என்ற நடனமாகப் பூர்த்தியாகின்றன.
சொற்கள் பூதங்களாம். அவைகள் மனித ரத்தத் தைக் குடித்த பிறகே அரிய பெரிய காரியங்களை எல்லாம் சாதிக்க முடியுமாம்.
என்னுடைய சொற்கள் சம்பந்தமாக உண்மையைச் சொல்லிவிடுகிறேன். இவைகள் பல வருஷங்களாக உள்ளத்தில் கிடந்து என் உதிரத்தைக் குடித்து வந்தன என்பதில் ஐயமில்லை. ஆனால், குடித்துவிட்டு, இப்பொழுது கிடைக்கிற நான் வரையில் ஏவிய வேலைகளை இவைகள் சாதிக்குமோ என்னவோ, தெரியவில்லை. அதைப்பற்றி எனக்கு கவலையும் இல்லை. இனி அது நீங்களும் என் சொற்களும் சம்பந்தப்பட்ட விஷயம்.
 ப. ரா.

Read More...
Paperback
Paperback 150

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

ப. ராமஸ்வாமி

'பாம்பின் கால் பாம்ப்றியும்' என்ற முதுமொழிக்கிணங்க, தான்பிரீனின் போராட்ட உணர்வினை எமது போராளிகள் மத்தியிலும் தொற்றவைக்கும் நோக்கில் தான்பிரீன் பற்றிய நூலை எங்கிருந்தோ முத்துக் குளித்து கண்டெடுத்தவர், தமிழீழப் போராளிகளின் தளபதிகளில் ஒருவர். அதனை மக்களிடையே பரப்பும் நோக்கில் நூலாக்கம் செய்யவென, பிரதி எடுத்து வைத்திருந்தார் மற்றுமொரு தமிழிழப் போராளி. ஆனால் துரதிஷ்ட வசமாக, அவர்கள் எண்ணம் நிறைவேறுமுன்பாகவே, வீரமரணமடைந்துவிட்டனர்; அந்த இருவர் வாழ்க்கையும் கூட இன்று வரலாறுகிவிட்டது. எனினும், அவர்களின் அந்த உணர்வு பல்லாயிரம் போராளிகளை உருவாக்கியுள்ளது என்பதில் சந்தேகமில்லை. அவ்விருவரதும் உடனடி நோக்கமான நூல் வெளியீடு இன்று கைகூடுகிறது. இதுபோலவே அவர்களதும், அவர்களை ஒத்த பலரதும், பரந்துபட்ட மக்களதும் இலக்கான விடுதலையை அடைந்தே தீருவோம் என்பது திண்ணம்.

பிரதியெடுக்கப்பட்ட கையெழுத்துப்பிரதியே எமக்குக் கிடைத்த நிலையில் அதன் ஆசிரியர் பற்றி அதிற் குறிக்கப்படாமையால் நூலாசிரியர் பெயர் தெரியாதிருந்தது. எனினும் நூலில் இடம்பெற்ற 'ஒரு வார்த்தை', முன்னுரை ஆகியவற்றின் ஊடாக, 1932 - 34 காலப் பகுதியில் நூலாசிரியர் திருச்சிச் சிறையில் அரசியல் கைதியாக இருந்த காலத்தில் எழுதியுள்ளார் என்பது புலனாகிளது. மேலும், முன்னுரையிலிருந்து, நூலாசிரியர், தான்பிரீன் நூலைத் தவிரவும் மைக்கேல் காலின்ஸ் பற்றியும், டொரென்ஸ் மாக்ஸ்வினியின் சுதந்திரத் தத்துவங்கள் பற்றியும் எழுதியிருப்பது தெரியவந்தது. இதனடிப்படையில் தேடிப்பார்க்கையில் மைக்கேல் காலின்ஸ் கிடைத்தது. அதனைப் படித்துப் பார்த்ததில் அந்நூலில் உள்ள குறிப்புகளினூடாகவும், தான்பிரீன் பற்றிய நூலையும், மைக்கேல் காலின்ஸ் நூலை எழுதிய திரு. ப. ராமஸ்வாமி என்பவரே எழுதினார் என்ற முடிவிற்கு வரவேண்டியுள்ளது.

Read More...

Achievements

+15 more
View All