Share this book with your friends

"Soththu...!" / “சொத்து…!”

Author Name: Srividhya Desikan | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

அன்பான வாசக நெஞ்சங்களே,

 சுரேஷ்  -சரஸ்வதி  , என்னும் தம்பதியினரின்  வாழ்க்கையில் வரும் சுவாரசியமான சம்பவங்களின் தொகுப்பே இந் நாவல்  சுரேஷ் ஒரு ஜெயிலர் ,  சரஸ்வதி  ஒரு  உளவியலாளர்  ஜெயிலில் நடக்கும் அத்தனை சுவாரசியமான சம்பவங்கள்...  ஒரு தூக்கு தண்டனை கைதி  அவன் வாழ்க்கை  அந்த ஜெயிலரின் வாழ்க்கையுடன் பிணைக்கப்பட்டு இருக்கிறது -  ஒரு கைதிக்கும்  ஜெயிலருக்கும் அப்படி என்ன சம்பந்தம்  கிளைமாக்ஸ் வரையில் பொறுத்திருந்து சுவாரசியத்தை   படித்து , அனுபவித்து , ரசியுங்கள்!

Read More...
Paperback

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

ஸ்ரீவித்யா தேசிகன்

 நாவலாசிரியர்  ஸ்ரீவித்யா தேசிகன்  ஒரு பத்திரிகையாளரும் எழுத்தாளரும் கூட  . அவர் பல  முன்னணி   தமிழ் பத்திரிகைகளில்  பல நூறு  கட்டுரைகள் , பேட்டிகள்  , சிறுகதைகள் எழுதியவர் -   எழுதிக் கொண்டிருப்பவர். அவருடைய முதல் புத்தகமான ‘நாதமெனும் கோவிலிலே ‘ , என்னும் புத்தகம்  பின்னணிப் பாடகி திருமதி வாணி ஜெயராமின்  இசை பயணத்தை பற்றியது  . ஒரு பின்னணிப் பாடகியின்  இசை பயணத்தை பற்றி  அவரே சொல்லி  எழுதப்பட்ட முதல் மற்றும் ஒரே புத்தகம் இதுவரையில் அதுதான் . இது தினமலர் வாரமலரில் தொடராக வெளிவந்த  இசைப் பயண பெட்டகம் .அதற்குப் பிறகு  அவர் எழுதிய  முதல் நாவல் தான் ‘வைதேகி காத்திருந்தாளோ ….!’ இந்த நாவலை  படித்த பலரும் குறிப்பாக  , பத்மபூஷன் டாக்டர் என் . ராஜம்  (வயலின் விதுஷி) , மெரி லாண்ட் பிக்சர்ஸ்  தயாரிப்பாளர் திரு எஸ் முருகன்  , நடிகைகள் கே ஆர் விஜயா , சச்சு லதா போன்ற பலரும்  பாராட்டியுள்ளனர்  . அதைத் தொடர்ந்து  அவருடைய இரண்டாவது நாவல் தான்  ‘சொத்து…!’ என்னும் இந்த நாவல்.   இந்நாவலின் சுவாரசியமே  இதில் இருக்கும்  புதுமையும்  அதை படித்து முடிக்கும் வரை   இந்த புத்தகத்தை கீழே வைக்க விடாமல் நம்மை ஆட்கொள்வதும் தான்  ! அடடா  ! படித்து முடித்த பிறகு கதையிலிருந்து நம்மால்  சிறிது நேரத்திற்கு  வெளியிலேயே வர முடியவில்லை ! அந்த வித்தியாசமான கிளைமாக்ஸை யாரும்   மிஸ் பண்ணாமல்  படித்து ரசியுங்கள்!

Read More...

Achievements

+2 more
View All