Share this book with your friends

Viyappoottum Vazhibaadugal / வியப்பூட்டும் வழிபாடுகள் (பழமைப்போற்றும் பாரம்பரியம்)

Author Name: Periyar Mannan P | Format: Paperback | Genre : Letters & Essays | Other Details

முன்னோர்களின் வழியில் பழமையையும், பாரம்பரியத்தையும் போற்றிப் பாதுகாக்கும் கிராமப்புற மக்கள், இன்றளவும் கைவிடாமல் தொடர்ந்து வரும், பல்வேறு வியப்பூட்டும் வழிபாட்டு முறைகள் குறித்த, அபூர்வமான தகவல்கள் இந்நுாலில் இடம்பெற்றுள்ளது.  பாரம்பரிய வழிபாட்டு முறைகள் குறித்து, புதுயுகத்தில் நாகரீகம், பண்பாடு, கலாச்சார மாற்றத்திற்கு ஆளாகி வரும் தற்கால சமூகமும், பல்வேறு மாற்றங்களோடு இவ்வுலகத்தை  எதிர்காலத்தில் காணவிருக்கும் வருங்கால சந்ததிகளும் தெரிந்து கொள்ளும் நோக்கில், தனித்துவமான 50 கிராமியக் கோவில் வழிபாட்டு முறைகள் பற்றிய  கட்டுரைகள், உரிய படத்துடன் இந்நுாலில் இடம் பெற்றுள்ளது. ஆன்மீக அன்பர்கள், வரலாற்று ஆர்வலர்கள் மட்டுமின்றி, குழந்தைகள்,  மாணவர்கள், இளைஞர்கள், பெண்களென அனைத்து தரப்பினரையும் படிக்கத்துாண்டும் வகையில் இந்நுால் அமைந்துள்ளது.

Read More...
Paperback
Paperback 200

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

கவிஞர். பெ.பெரியார்மன்னன்

நுாலாசிரியர் கவிஞர்.பெ.பெரியார்மன்னன், சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த பத்திரிக்கையாளர். சிறந்த கல்வியாளர்.  மழலைக்காவியம், கிள்ளைமொழி, ஊஞ்சல் ஆகிய குழந்தைகளுக்கான சிறார் பாடல் நுால்களை எழுதியவர். மழலைக்காவியம் நுாலில் இருந்து 3 கதைப்பாடல்கள் சாகித்ய அகடமி சிறுவர்கள் கதைப்பாடல் தொகுப்பு நுாலில் இடம்பெற்றுள்ளது. கிள்ளைமொழி நுாலுக்கு சிறந்த குழந்தை இலக்கியத்திற்கான விருது கிடைத்துள்ளது. இவரது பேசும் மெளனங்கள் கவிதை நுால் மற்றும் விந்தை மனிதர்கள் கட்டுரை நுால்கள், இணைய வழியில் விற்பனையாகி வருகிறது. வியப்பூட்டும் வழிபாடுகள் நுால் அபூர்வமான கிராமியக் கோவில்கள் குறித்த கட்டுரைகளை உள்ளடக்கியதாகும்.  

Read More...

Achievements

+8 more
View All