Share this book with your friends

KANAVAI VITHAIPPAVAN / கனவை விதைப்பவன்

Author Name: MAYAN MEYYARIVAN | Format: Paperback | Genre : Poetry | Other Details

கனவை விதைப்பவன், கவிஞர் மாயன் மெய்யறிவன் அவர்களின் இரண்டாவது கவிதை நூல். இத்தொகுப்பானது 'பட்டாம்பூச்சி பறக்கிறது, கனவை விதைப்பவன், மனக்குமிழி, புராதனம் தேடி' என நான்கு பிரிவுகளின் கீழ் 69 கவிதைகளைக் கொண்டுள்ளது. உள்ளார்ந்த உணர்வுகளின் வெளிப்பாடாக, உள்முகத் தேடலின் வெளிப்பாடாக, கனவுகளை விதைத்து உயரம் பறக்க விரும்பும் மனதின் வெளிப்பாடாக, இத்தொகுப்பின் கவிதைகள் அமைந்துள்ளன.

Read More...
Paperback
Paperback 155

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

மாயன் மெய்யறிவன்

மாயன் மெய்யறிவன் அவர்களது இயற்பெயர் கணேஷன் குருநாதன். 1970 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள நெய்வேலி நகரில் பிறந்தவர். ‘மீறல்’ இலக்கிய இதழின் ஆசிரியர் குழுவில் இருந்தவர். ‘மீறல்-பிரமிள் சிறப்பிதழ்’ கொண்டு வந்தவர்களில் ஒருவர். ‘உள்முகம்’ கவிதை இதழின் ஆசிரியர். மாயனின் பல கவிதைகளும் நவீன இலக்கிய இதழ்களிலும் இணையத்திலும் வெவ்வேறு புனைபெயர்களில் வெளிவந்துள்ளன. முதல் கவிதைத் தொகுப்பு "துளிரும் சிறகு" என்கிற தலைப்பில் 1997-ஆம் ஆண்டு மனோரஞ்சன் என்கிற புனைபெயரில் வெளியிடப்பட்டது. Tamilwing.com தளத்தின் நிர்வாக ஆசிரியர். தொழில் சார்ந்து இன்ஜினியராகவும் ஆர்வம் சார்ந்து எழுத்தாளராகவும் உள்ளார். சென்னையில் வசிக்கிறார்.

மற்ற புனைபெயர்கள்: விடுதலை விரும்பி, குருநாத் கணேசன், குன்சௌம், ஜி.ஜி. நந்தன் கௌதம், சிகரன், குருஜி கணேஷன், குருநாத் கேடோ ரஞ்சன், குருநாத் கே ரஞ்சன், ஜி.கே. ரஞ்சன், மனோரஞ்சன், கணேஷன் குரு.

Read More...

Achievements

+1 more
View All